மக்கள் பார்வையில் கம்பர்
கோசல நாட்டில் பறவைகளும்
விலங்குகளும் அன்பு பாராட்டி
மகிழ்வாய் வாழ்ந்ததை
தனக்குரிய கவிநயக் கற்பனை
வளத்தோடு சாமான்ய மக்களுக்குப்
புரியும்படி எளிமையாக
பாலகாண்டத்தின் நாட்டுப்படலப்
பாடலிலே கவி பாடுகிறார்
சேல் உண்ட ஒண்கனாரின்
திரிகின்ற செங்கால் அன்னம்
மால் உண்ட நளினப்பள்ளி
வளர்த்திய மழலைப்பிள்ளை
கால் உண்ட சேற்று மேதி
கன்று உள்ளிக் கனைப்பச் சோர்ந்த
பால் உண்டு துயிலப் பச்சைத்
தேரைத் தாலாட்டும் பண்ணை
மீன் போன்ற கண்களை உடைய
பெண்களைப் போலத் திரிகின்ற
சிவந்த கால்களை உடைய அன்னம்
தாமரை மலர் படுக்கையில்
தன் குஞ்சுகளை இட்டு
கோசலத்து பெண்களின் நடையழகைக்
கண்டு வியந்து திரிய
காலில் ஒட்டிய சேற்றோடு
எருமை அந்த தாமரை மலர்
படுக்கையைத் தாண்டா
நீர்த் திவலைகள் அதன் மடியில்
பட கன்றுக் குட்டி கனைப்பு
நினைவில் நின்றாடத்
தானாகப் பால் பீய்ச்ச
அன்னக் குஞ்சுகள் பாலை
உண்டு பசியாற
பச்சைத் தேரைகள் தாலாட்ட
அன்னக் குஞ்சுகள்
கண் அயர்ந்தன
என்பதே இப்பாடலின் விளக்கம்
பொதுவாக பெண்களின்
நடையழகை அன்னத்தோடு
ஒப்பிடுவர்
இங்கே கம்பர் கற்பனை நயமாக
பெண்களின் நடையழகைக்
கண்டு அன்னம் திரிந்தது
என்றார்
தமிழ்ச் சான்றோர் பெருமக்கள்
இதற்கு அருமையாக உவமை
நயம் என்று கூறுவர்
அதாவது எருமையின் பால்
கன்றுக்குச் சொந்தம்
அல்லது அதை வளர்த்தவனுக்குச்
சொந்தம்
ஆனால் யாருக்கும் இல்லாமல்
அன்னக் குஞ்சுகளின் வாய்க்குப்
போனது என்று உரைப்பதின் மூலம்
தயரதனுக்குப் பிறகு அரசாட்சி
ராமனுக்கு
இல்லை எனில் பரதனுக்கு
ஆனால் பாத ரட்சைக்கு
ஆட்சி போனது
என்பதையே கம்பர்
இப் பாடலில் உரைப்பதாகக்
கூறுகிறார்கள்
தமிழ்ச்சான்றோர்
கம்பரை அகமகிழ
முகம் மலர
மெய் சிலிர்க்க
மனமாரப் பாராட்டி வாழ்த்துவோம்
மீண்டும் சந்திப்போம்...
Leave a comment
Upload