தொடர்கள்
கதை
கணவன் -மதுராந்தகம் முனைவர் என்.பத்ரி

20240828080834887.jpeg

ஆஃபீஸ் போய் உட்கார்ந்தான் கோபி. உடனே அவனுடய ஃபோன் சிணுங்கியது.
”ஹலோ…சொல்லு புவனா,” கோபி தன்னுடைய மனைவியைக் கேட்டான்.
“ஏன் ரெண்டுதடவையும் எடுக்கல?”இது புவனா,அவனுடைய புது மனைவி.
“ஒரு மீட்டிங்ல இருந்தேன்.”இது அவளோட கணவன் கோபி.இப்படியே அவர்கள்
உரையாடல் தொடர்ந்தது.
“எனக்குத் தோணும்போது போன் பண்ணி,சொல்ல நினைச்சா, அப்போ எடுக்காதீங்க!

“அப்படி ஏதாவது அவசரமான விஷயம்னா வாட்ஸாப் மெசேஜ்
அனுப்பியிருக்கலாமே?”
“ஆமாம், மெசேஜ்லேயே குடும்பம் நடத்திக்கலாம்! பொண்டாட்டிகிட்ட இருந்து வர்ற
ஒரு போன் கூட அட்டெண்ட் பண்ண முடியாத ஆபீஸ்!”
“விடும்மா, அதுதான் கூப்பிட்டுட்டேன்ல, சொல்லு!”
“இப்போவாவது ஃப்ரீயா, இல்லையா?”
“ஃப்ரீதான் தாயே, சொல்லு!”
“என்ன சொல்ல வந்தேன், ஆ! நியாபகம் வந்துருச்சு!”
“சொல்லு!”
“சமையல் பண்ணலாம்னு கிச்சனுக்கு போனேன், அரிசி டப்பாவை தேடுனா
எங்கேயோ தூக்கி வெச்சுட்டீங்க!”
“அடியே, நான் அதை கண்டிப்பா ஆஃபீஸ்க்கு எடுத்துக்கிட்டு வரல! தேடிப்பாரு
ப்ளீஸ்!”

“ஐயோ, என்னை பேச விடுங்களேன், இப்போ உங்களை எடுத்துக்கிட்டு
போயிட்டீங்கன்னு யாரு சொன்னா!”
“வேற என்னதான் சொல்ல வர்றே?”
“ஒரு நிமிஷம் பொண்டாட்டிகிட்ட பேச பொறுமை இருக்கா உங்களுக்கு?
இதே உங்க லேடி டைப்பிஸ்ட் கிட்ட மட்டும் மணிக்கணக்குல பேசமுடியுது!
உங்க பக்கத்து சீடல இருக்கவங்க எல்லாம் எப்படி இருக்காங்க அவங்கள கொஞ்சம்
கேளுங்க.”
“சரி, கேட்கறேன், சொல்லு, என்ன?”
“இப்படி குறுக்க குறுக்க பேசுனா சொல்ல வர்றதே மறந்துபோகுது!”
“சரி பேசல, சொல்லு!”
“என்ன சொல்லிக்கிட்டிருந்தேன்?”
“ம்ம்ம்..அரிசி டப்பா!”
அதுக்கு ஏன் சலிச்சுக்கறீங்க!”
“இல்லம்மா, சொல்லு!”
“ம், அரிசி டப்பாவை தூக்கி மேல வெச்சுட்டீங்க!
எட்டி எடுக்கலாம்ன்னு பார்த்தா, கால்ல சுரீர்ன்னு வலிக்குது! “அதுக்குதான் ஃபோன்
பண்ணுனியா?” “அதுக்கு இப்போ எதுக்கும்மா போன் பண்ணி சண்டை போடறே?”
“ஆமா, என்னப் பாத்தா சண்டைக்காரி மாதிரிதான் தெரியும் உங்களுக்கு!
“சரி, நம்ம சண்டையெல்லாம் வீட்டுக்கு வந்ததும் வெச்சுக்கலாம்! இப்போ எதுக்கு
கால் பண்ணுனே, அதைச் சொல்லு!”
“என்னை எங்க சொல்ல விடறீங்க! ஒரு வார்த்தை பேசறதுக்குள்ளகுறுக்க பேசுனா
மனுஷி என்ன பேசறது? “

“மறுபடியும் ஆரம்பிக்காதே, சொல்லு, என்ன விஷயம்?”இன்னைக்கு நிறைய வேலை
இருக்கு! “
“சரி நீங்க போய் வேலையைப் பாருங்க, நான் அப்புறமா கூப்பிடுறேன்!”
“தாயே, வதைக்காதே, எதுக்கு ஃபோன் பண்ணுனே? சொல்லு!”
“அதென்ன, வீட்டிலிருந்து ஃபோன் வந்தாலே இவ்வளவு சலிச்சுக்கறீங்க?”
“இல்லம்மா, சொல்லு!”
“எங்க சொல்லவிடறீங்க? வீட்டுக்கு ஒன்னு வேணும்ன்னாகூட ஃபோன்
பண்ணக்கூடாதா?”
“என்னதான் வேணும் உனக்கு இப்போ!”
“அதுதான் மறந்தே போச்சு, எத்தனை தடவை குறுக்கே பேசறீங்க! ஞாபகம் வந்ததும்
சொல்றேன்!”
“சரி!….”
வெச்ச மறுநொடி அடுத்த போன்!
“ஏன் கட் பண்ணீங்க?”
“நீதானம்மா நியாபகம் வந்ததும் சொல்றேன்னே?”
“இப்போ நியாபகம் வந்துருச்சு!”
“சரி சொல்லு!”
“அரிசி டப்பாவை அவ்வளவு கஷ்டப்பட்டு எடுக்கவேண்டி இருக்கு! ஏன் மேல தூக்கி
வெச்சீங்க? இனிமேல் இப்படி எல்லாத்தையும் கலைச்சு வைக்காதீங்க!”
“சரி, இனிமேல் வைக்கல! சொல்லு!”
“அவ்வளவு கஷ்டப்பட்டு எடுத்துப் பார்த்தா, அதுல அரிசி கொஞ்சம்தான் இருக்குது!
காலைல குக்கர்ல சாதம் நீங்கதானே வைச்சீங்க? சொல்லமாட்டீங்களா?”

“மறந்துட்டேன்! விடு! இப்போ எதுக்கு போன் பண்ணுனே? “
“ஒரு வார்த்தை பேச விட்றங்கிலா? சரி, மறக்காம சாயங்காலம் வரும்போது அஞ்சு
கிலோ அரிசி வாங்கிக்கிட்டு வந்துடுங்க!”
“உனக்கே இது நியாயமா இருக்கா? அரிசி வாங்கிட்டு வாங்கன்னு ஒரு வார்த்தைல
சொல்லமுடியாதா?”
“ம்க்கும்! தப்புதான் சாமி! ஒரு வார்த்தை எக்ஸ்டரா பேசக்கூடாது!
உங்களுக்கு எதுக்கு தொந்தரவு! நீங்க ஒன்னும் வாங்கிக்கிட்டு வரவேண்டாம், நானே
வாங்கிக்கறேன்!
நீங்க உங்க ஆபீஸையே பாருங்க! “புதுமனைவி புவனா ஃபோனை கட்
பண்ணிட்டாள்.
“ஹலோ, ஹல்லோ ……”இப்போது ஸ்விட்ச்டு ஆஃப்.நிம்மதி .கொஞ்ச நேரம் ஆபீஸ்
வேலைய பார்க்கலாம்’னு ஃபைலில் மூழ்கினான் கோபி.
எனக்குத்தான் இப்படியா? பெண்டாட்டியின் அன்புத்தொல்லை உங்களுக்கும்
இப்படி உண்டா? கொஞ்சம் சொல்லுங்களேன் ப்ளீஸ்.