தொடர்கள்
ஆன்மீகம்
தினம் தினம் திவ்ய அனுபவம் - 01 - ஸ்ரீனிவாஸ் பார்த்தசாரதி

20240619150327370.jpg

ஸ்ரீ திவ்ய பிரபந்தம் சேவிப்போம்

தமிழ் மொழியை பல்லாயிரம் காலமாக வாழ்விக்க பல விஷயங்கள் உதவியுள்ளது. அதில் முக்கியமானது ஆழ்வார்கள் அருளிய ஸ்ரீ திவ்ய பிரபந்தம். சங்கரா தொலைக்காட்சியின் முயற்சியில் கவசம் யுடியூப் சேலில் தினமும் ஒரு பாசுரம் என அடுத்து 4000 நாட்களுக்கு நம்மை தமிழுயிலும், பக்தியிலும், ஆன்மீகத்திலும் ஈடுபடுத்த முயற்சிக்கிறது. இது நமக்கு கிடைத்த மாபெரும் பாக்கியம். அடுத்த 11 வருடம் நமக்கு இது ஒரு பழக்கமாகவே தொடரும். நம் அடுத்த தலைமுறையினருக்கும் இதனை எடுத்து சென்றால் என்றென்றும் நம் இல்லத்தில் பிரபந்தம் ஒலிக்கும்.

விகடகவி வாரம்தோறும் அந்த காணொளிகளை தொகுத்து உங்களுக்கு வழங்குவதில் பெருமை கொள்கிறோம்

திருப்பல்லாண்டு [ 12 பாசுரங்கள் ]

பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்து ஆண்டு ,

பலகோடி நூறாயிரம் ,

மல்லாண்ட திண் தோள் மணிவண்ணா

உன் சேவடி செவ்விய திருகாப்பு !

அடியோமோடும் நின்னோடும் பிரிவின்றி ஆயிரம் பல்லாண்டு ,

வடிவாய் உன் வலமார்பில் வாழ்கின்ற மங்கையும் பல்லாண்டு ,

வடிவார் சோதி வலதுறையும் சுடராழியும் பல்லாண்டு

படைபோர்க்குக் முழங்கும் அப்பஞ்சசனியமும் பல்லாண்டே !

வாழாட்பட்டுநின்றீருள்ளீரேல் வந்துமண்ணும்மணமும்கொண்மின்
கூழாட்பட்டுநின்றீர்களை எங்கள்குழுவினில்புகுதலொட்டோ ம்
ஏழாட்காலும்பழிப்பிலோம்நாங்கள் இராக்கதர்வாழ்இலங்கை
பாழாளாகப்படைபொருதானுக்குப் பல்லாண்டுகூறுதமே.

ஏடுநிலத்தில்இடுவதன்முன்னம்வந்து எங்கள்குழாம்புகுந்து
கூடுமனமுடையீர்கள் வரம்பொழிவந்துஒல்லைக்கூடுமினோ
நாடும்நகரமும்நன்கறிய நமோநாராயணாயவென்று
பாடுமனமுடைப்பத்தருள்ளீர். வந்துபல்லாண்டுகூறுமினே.

அண்டக்குலத்துக்கதிபதியாகி அசுரரிராக்கதரை
இண்டைக்குலத்தைஎடுத்துக்களைந்த இருடீகேசன்தனக்கு
தொண்டக்குலத்திலுள்ளீர். வந்தடிதொழுது ஆயிரநாமம்சொல்லி
பண்டைக்குலத்தைத்தவிர்ந்து பல்லாண்டுபல்லாயிரத்தாண்டென்மினே.

எந்தைதந்தைதந்தைதந்தைதம்மூத்தப்பன் ஏழ்படிகால்தொடங்கி
வந்துவழிவழிஆட்செய்கின்றோம் திருவோணத்திருவிழவில்
அந்தியம்போதிலரியுருவாகி அரியையழித்தவனை
பந்தனைதீரப்பல்லாண்டு பல்லாயிரத்தாண்டென்றுபாடுதமே.

தீயிற்பொலிகின்றசெஞ்சுடராழி திகழ்திருச்சக்கரத்தின்
கோயிற்பொறியாலேஒற்றுண்டுநின்று குடிகுடிஆட்செய்கின்றோம்
மாயப்பொருபடைவாணனை ஆயிரந்தோளும்பொழிகுருதி
பாய சுழற்றியஆழிவல்லானுக்குப் பல்லாண்டுகூறுதுமே.

நெய்யிடைநல்லதோர்சோறும் நியதமும்அத்தாணிச்சேவகமும்
கையடைக்காயும்கழுத்துக்குப்பூணொடு காதுக்குக்குண்டலமும்
மெய்யிடநல்லதோர்சாந்தமும்தந்து என்னைவெள்ளுயிராக்கவல்ல
பையுடைநாகப்பகைக்கொடியானுக்குப் பல்லாண்டுகூறுவனே.

உடுத்துக்களைந்த நின்பீதகவாடையுடுத்துக் கலத்ததுண்டு
தொடுத்ததுழாய்மலர்சூடிக்களைந்தன சூடும்இத்தொண்டர்களோம்
விடுத்ததிசைக்கருமம்திருத்தித் திருவோணத்திருவிழவில்
படுத்தபைந்நாகணைப்பள்ளிகொண்டானுக்குப் பல்லாண்டுகூறுதுமே.

எந்நாள்எம்பெருமான் உன்தனக்கடியோமென்றெழுத்துப்பட்ட
அந்நாளே அடியோங்களடிக்குடில் வீடுபெற்றுஉய்ந்ததுகாண்
செந்நாள்தோற்றித் திருமதுரையுள்சிலைகுனித்து ஐந்தலைய
பைந்நாகத்தலைபாய்ந்தவனே. உன்னைப்பல்லாண்டுகூறுதுமே.

அல்வழக்கொன்றுமில்லா அணிகோட்டியர்கோன் அபிமானதுங்கன்
செல்வனைப்போலத் திருமாலே.நானும்உனக்குப்பழவடியேன்
நல்வகையால்நமோநாராயணாவென்று நாமம்பலபரவி
பல்வகையாலும்பவித்திரனே.உன்னைப்பல்லாண்டுகூறுவனே.

பல்லாண்டென்றுபவித்திரனைப்பரமேட்டியை சார்ங்கமென்னும்
வில்லாண்டான்தன்னை வில்லிபுத்தூர்விட்டுசித்தன்விரும்பியசொல்
நல்லாண்டென்றுநவின்றுரைப்பார் நமோநாராயணாயவென்று
பல்லாண்டும்பரமாத்மனைச் சூழ்ந்திருந்தேத்துவர்பல்லாண்டே.

Full Play List: https://www.youtube.com/playlist?list=PL8AM1mPgjc_eZ1kT1tIPc1LGe3hb4VmG2