தொடர்கள்
கதை
தாய் தந்த சீதனம் - ஆனந்த் ஶ்ரீனிவாசன்

20240412143952122.jpeg

சில சம்பவங்களை, நாம் தினமும் பார்க்கிற போதும், கேள்விப் படுகிறபோதும், ஒரு நாள் நமக்கும் நடக்கக் கூடும் என்று அப்போது நினைப்பதில்லை;.

கூடப் பிறந்த சகோதரிகள், திருமணங்களைத் தன் சொந்தபணத்தில்,அப்பாவுக்குப் பொருளாதாரக் கஷ்டம் கொடுக்காமல், தோள் கொடுத்து, எல்லாம் முடித்துத் திரும்பி பார்த்த போது பிரசன்னா வயது 40ஐ கடந்து விட்டது.இந்த நேரத்தில் தான் அப்பாவும் தவறிப் போனார்.

இந்தக் காலத்தில் பெண்கள் எதிர்பார்க்கும் வசதிகள் அனைத்தும்இருந்தும், வயது 40 என்பதால் திருமணம் தகையாமல் போனது..


எல்லாவிதமானமெட்ரி மோனியல் சைட்டிலும், பணம் கட்டி பணமும், நேரமும் தான் விரயமானது தான் மிச்சம் வாட்ஸ்அப் குரூப் அதையும் விட்டு வைக்க வில்லை

"எப்போதான் நேரம் வருமோ?"என்ற அம்மாவின் கடினமான,பிரார்த்தனை ஒரு நாளில் கைக்கூடியது..

வசுமதியும் தன்னை மாதிரி கூடப் பிறந்தவர்களைக் கரைசேர்த்த பிறகு, "ஒனக்கும் ஒரு துணை வேண்டும்" என்று அவள் அம்மா தினமும் கெஞ்சியதால், கல்யாணம் செய்ய ஒத்துக் கொண்டாள்.
.
பிரசன்னா ஆபிசில்,சமீபத்தில்அவன்ரேங்க் ஒட்டி பெரியபோஸ்டில் புதிதாக
சேர்ந்துருந்தாள்.

ஒருநாள் இரண்டுபேருடையஅம்மாக்களும் கூடவே தங்களுடன் இருக்கவேண்டும் என்கிற நிபந்தனையுடன்,34 வது வயதில் வசுவுக்கு ஒரு நன்னாளில் திருமணம் நடந்து முடிந்தது.

குறிப்பிட்ட வயதுக்கு மேல் ,பெண்களுக்கும் சரி,ஆண்களுக்கும் சரி குழந்தைப்பேறு வாய்ப்புக்கணிசமாகக் குறைகிறது என்பதுடன் ; காலம் கடந்த திருமணம் வேறு ;குழந்தை விசயத்தைத் தள்ளிப் போடக்கூடாது என்பதால் உடனடியாகக் குழந்தை பெற்றுக் கொள்வது நல்லது என்று பிரசன்னா சொன்னபோது வசுவும் ஒப்புக்கொண்டாள்.

திருமணம் முடிந்த மறு வருடமே மொத்த குடும்பமும், இதே நேரம் குழந்தை தவழும் என்று எதிர்பார்த்திருக்க, விதி வேறுவிதமாக இருந்தது. கிட்டத்தட்ட 15 மாதங்களாகியும், வசு கருவுறவில்லை.

இப்போது வசுவையும், உறவினர்கள் நண்பர்கள், தெருவாசிகள், விசாரிக்கத் தொடங்கவும் வசுமதி கண்களில் நீர் கரைகட்டி விட்டதைப் பார்த்து கலங்கி போனான் பிரசன்னா.

ஒரு சிறந்த மகப்பேறு. மருத்துவர் ஒருவரிடம் அணுகிய போது, ..

வசுவிற்கு AMH (Anti Mullerian Harmone) பரிசோதனை செய்யச் சொன்னார்.
கருவுறும் ஆற்றலைப் பெற்ற கரு முட்டைகளை உருவாக்கும்சக்திஒரு பெண்ணுக்கு எந்தத் தஅளவிற்கு உள்ளது என்பதைத் தெரிந்துகொள்வது
பற்றியசோதனை. அது.


வசுமதியின் வயதுக்கு அது சிறப்பாகவே இருந்தது.. என்று டாக்டரால் சொல்லப்பட்டது.


சென்னையில் மிகவும் புகழ் வாய்ந்த மற்றுமொரு மகப்பேறு மருத்துவர் ஒருவரிடம் காண்பிக்கும் போது" அவர் ரிப்போர்ட் களைப் பார்க்க ஆரம்பித்தார்.

"நான் சொல்வதைத் கேட்டு நீங்க இரண்டு பேரும் அதிர்ச்சி அடையகூடாது."
"இன்னிக்கு மெடிகல் சைன்ஸ் எவ்வளவு தூரம் வளர்ந்துருக்குனு உங்களுக்கே தெரியும்".

"டாக்டர் என்ன சொல்ல வரீங்க?" என்று கேட்க நினைக்கத் தோன்றிய இருவருக்கும் பேச்சு வராமல் வெறும் காத்துதான் வந்தது.

ஒரு நிமிட மௌனத்துக்குப் பிறகு, அவர்கள் இருவரையும் பார்த்து பேச ஆரம்பித்தார் டாக்டர்.

"பிரசன்னா…… ஒங்க ரிப்போர்ட்டில் எந்தப் பிரச்சனையும் இல்லை., எல்லாம் நார்மல்.;ஆனாஒங்க மனைவிக்குத் தான் என்றதும் முகத்தில் கவலை தெரிய ஆரம்பித்தது.

"நத்திங் டு வொர்ரி."

ஒங்க மனைவிக்குச் சிறியகர்ப்பப்பைஇயல்பாகச் செயல்படாமல் போயிருக்கு.எனவேஒங்களுக்குக் குழந்தை பெற்று தர வாய்ப்பில்லை.
ஆனால் அதற்காக மனம் தளர வேண்டாம்."

"வாடகைத் தாய் மூலமோ, தத்து எடுத்துக்கொள்வதன் மூலமோ இல்லை,
ஐ. வீ.எப் மூலமோ தான் குழந்தை பாக்கியம் ஏற்படும் " என்று சொன்னார் .

வசுவை முதலில் பரிசோதித்த மருத்துவர் கரு முட்டைகள் பற்றி விளக்கம் கொடுத்தாரே தவிரக் கர்ப்பப்பை குறைபாடு பற்றிக் கருத்துத் தெரிவிக்காமல் மறைத்தது ஏன்? என்கிற சந்தேகம் இருவருக்கும் வந்தது .

வசுவைப் பொறுத்து டாக்டர் சொன்ன மேற்கண்ட முறைகளில் உடன்பாடு இல்லை என்று தெரிவித்தாள்.


"இல்லை ……. அதில் எங்களுக்கு இஷ்டமில்லை! டாக்டர்….

"வேறு ஏதும் மாற்று ஏற்பாடு செய்யமுடியாதா?" விரக்தியில் கேட்டார்கள். இருவரும்.


"ஒரே ஒரு மாற்று வழி உங்கள் மனைவி கர்ப்பப்பையை மாற்றிவிட்டு, இன்னொரு கர்ப்பப்பையைப் பொருத்தி பார்த்து முயற்சிக்கலாம்.;இப்போது இந்தியாவில் அதுவும் சென்னையில் பரவலாக ,இந்தக் கர்ப்பப்பை மாற்றுச் சிகிச்சை நடைமுறையில் வந்துள்ளது.

"மகப்பேறியல் மற்றும் மகப்பேறு மருத்துவத்தில் புதிய நவீனத்துவ மருத்துவம் கர்ப்பப்பை மாற்று அறுவை சிகிச்சையாகும்."


"ம் ம் ..... இன்னொரு விசயமும் சொல்கிறேன். எல்லோரும் இந்தக் கர்ப்பப்பை தானம் செய்யமுடியாது. வசுவின் இரத்த உறவுகள் மட்டுமே கர்ப்பப்பை தானம் தர முடியும்.காரணம் அவர்களின் மரபணுக்கள் ஒரே மாதிரியாக இருக்கும்".

மற்றுமொரு முக்கியமான விஷயம், தானம் கொடுப்பவர் வயது 49-54 க்குள் இருக்க வேண்டும்.;

அவர்களுக்கு மாதவிடாய் சுழற்சி நின்றிருக்கக் கூடாது.மாதவிடாய் வரவில்லை என்றால், மருந்து கொடுத்து அது ஆரம்பிக்கப்படும்.

"அப்படி ஒரு வாய்ப்பு ஒங்க குடும்பத்தில் இருக்கும் பட்சத்தில் நீங்கள் அதற்கு முயற்சிக்கலாம்" என்றார் மருத்துவர்.


வீட்டுக்கு வந்ததும்நடந்ததைச் சொன்னான் பிரசன்னா.வசு குலுங்கி குலுங்கி அழ ஆரம்பித்தாள்;

"எனக்குக் குழந்தைப் பாக்கியம் கிடைக்காதா?நான் என்ன பாவம் செஞ்சேன்?"

இருவருடைய அம்மாக்களும் ஆறுதலாக ஒரு மித்த குரலில் ,இந்த உலகத்திலே தீர்க்க முடியாத பிரச்னைனு எதுவும் இல்லை.அமைதியாக இரு. என்றார்கள்.


சற்று நேரம் கழித்து, உங்கள் பிரச்சனைக்குத் தீர்வு இருக்கு.என்றார் வசுவின் அம்மா காமாட்சி.”இப்படி என் பக்கம் உக்காரு” சோபாவில அமர சொன்னாள். அவளை ஆறுதலாக அனைத்து தலையை வருடி கொடுத்தார்.

"இத பாரு வசு .புராண காலத்தில்ருந்தே டோனர் முறை இருந்துருக்கு "

அந்தக் காஞ்சி காமாட்சி யின் கருணை உள்ளமாக,"என் பெண் வசு பிறந்த அதே கருப்பயை நான் தானமா கொடுக்கிறேன்"


இந்தக்குடும்பத்துக்கு ஒழைச்ச அவளுக்கு நான் செய்யும் கைமாறு மாப்ளே"
.
"காஞ்சிப் பெரியவா அனுகிரகத்தினால், டாக்டர் குறிப்பிடும் சர்க்கரைக் கோளாறு, ஹெப்படடிஸ் பீ ,தொற்று உயர் இரத்த அழுத்தம், எச்ஐவி, எதுவும் எனக்கு இல்லை.மாதவிடாய்அதுவும் நிக்கல.எல்லாமே வசுக்கு சாதகமா இருக்கு. நானும் ஆரோக்கியமாக இருக்கேன் .என் கர்ப்பப்பை நன்றாக வேலை செய்யும் அந்த நம்பிக்கை இருக்கு”

என் பதினெட்டாவது வயதில். வசுவை பெற்று எடுத்தேன் . 34 வருடம் கழித்து அவளுக்காக நான் இந்த உதவி செய்யாமல் போனால் நான் நன்றி மறந்தவள் ஆகி விடுவேன். இந்தக் குடும்பத்துக்கு ஒடா ஒழச்சவ வசு.அவ சந்தோசம் தான் எனக்கு இப்ப முக்கியம்.

அம்மாவை அப்படியே கட்டிக்கொண்டாள் வசுமதி. ஆனந்த் கண்ணீர் பெருக ஆரம்பித்தது

"அத்தை ஒங்கள பார்த்தா பெருமையா இருக்கு ; ரொம்பவும் நன்றி"என்றான் பிரசன்னா.

"சம்மந்தி ஒங்களுக்குப் பெரிய மனசு. "என்றார் பிரசன்னாவின் அம்மா.

"மருத்துவரிடம் வசுவின் அம்மாவை காண்பித்து.கர்ப்பப்பையை எடுக்கச் சோதனைகள் நடத்தப்பட்டு முடிவு செய்யப்பட்டது.

மாற்றுக் கர்ப்பப்பை பொருத்துவதற்கு முன் வசுவின் கருமுட்டையும் பிரசன்னாவின் விந்தணுவும் பெற்று இரண்டையும் இணைத்து கரு உருவாக்கி பரிசோதனைக் கூடத்தில் வைக்கப்பட்டது.

சில மாதங்கள் கழித்துசோதனைகள் முடிந்தவுடன்,தாயின் அடிவயிற்றின் கீழ் பகுதியில் லேபராஸ்கோப் மூலம் இரண்டு அங்குல கீறல் போடப்பட்டு. ரீட்ராக்‌ஷன் மூலம் கருப்பை அகற்றப்பட்டது. கூடவே இரத்த நாளங்கள் (சப்ளை மற்றும் வெளிச்செல்லும்) இரண்டும் வெளியே எடுக்கப்பட்டு," .அதன் பிறகு, கருப்பைச் சுத்தம் செய்யப்படடது.

பின்னர் வசு வயிற்றில் ஒரு கீறல் மூலம் கருப்பைச் சொருகப்பட்டு, ரத்த நாளங்கள் பிறப்புறுப்புடன் இணைக்கப்பபட்டது,"

மாற்றுக் கருப்பைத் தானம் பெற்றவர்களுக்குமாதவிடாய் அறிகுறிகள் சாதாரணமாகவே இருக்கும்.மாதவிடாய் காலத்தில் வலி இருக்காது. ஆனால் அதே நேரம் அவர்கள் 'கருத்தரிக்க' முடியும். அதாவது தாயாக முடியும்.

மாற்றுக் கர்ப்பை அஞ்சு ஆண்டுகள் இருக்கும்அதற்குள்ஒரிருகுழந்தைகள்பெற்றுக் கொள்ளலாம்;. அதற்குப் பிறகு அகற்றி விட வேண்டும்."

மருத்துவர் அறிவுறுத்திய அறிவுரைகள் முழுதும் கவனத்தில் கொண்டனர்
பிரசன்னாவும் வசுவும்.

வசுவுக்குப் பிரசவவலி. ஒரு நாள் ஏற்பட்டதும் மருத்துவமனையில் சிசேரியன் மூலம்அவர்கள் வீட்டு மஹாலக்ஷ்மி பிறந்தாள்.

கடந்த 25 ஆண்டுகளில் தாய்மையடவது பெரும் பிரச்சினையாக உள்ளது.

நவீன வாழ்க்கையின் ஓயாத பதட்டமும் ,மன உளைச்சலும், மோசமான உணவுப் பழக்கமும், இந்த இனப் பெருக்கத்துக்குச் சவாலாக ஆக்கியுள்ளது.


.இப்போது அந்தக் குட்டி தேவதை சிரிப்பை பார்க்கிறபோது "பருவத்தே பயிர் செய்" என்று சொல்வது போலவே இருக்கிறது.
ஆனந்த் ஶ்ரீனிவாசன்