தொடர்கள்
ஆரோகியம்
விரல்களில் விந்தை - அபான வாயு முத்ரா - ரஜனி சுப்பிரமணியம்

20230230180617689.jpg

பாரத நாட்டின் பழமை வாய்ந்த யோகக்கலையை சமீப காலமாக பெரும்பாலானோர் பின்பற்றி பயனடைந்து வருகின்றனர். உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை அளிக்கவல்ல யோகக்கலையின் ஒரு பகுதியே யோக முத்திரைகள் ஆகும்.

அண்டத்தில் உள்ளது, பிண்டத்திலும் உள்ளது. ஆம். நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகிய பஞ்ச பூதங்களால் ஆனதே மனித உடல். நமது கை விரல்களை உபயோகித்து, வியக்க வைக்கும் உடல் நல பயன்களை நாம் பெறலாம். சுண்டு விரல் நீர் தன்மையையும், மோதிர விரல் நிலத்தின் தன்மையையும், நடு விரல் ஆகாயத்தின் தன்மையையும், ஆள் காட்டி விரல் காற்றின் தன்மையையும், கட்டை விரல் நெருப்புத் தன்மையையும் கொண்டுள்ளன.

முத்திரைகள் செய்யும்போது, சில வழி முறைகளைக் கடைபிடிக்க வேண்டும். தரையில் ஒரு விரிப்பின் மீது சப்பணமிட்டு அமரலாம். அல்லது நாற்காலியில் உட்காரும் போது கால் பாதங்களை தரையில் பதித்து அமர வேண்டும். முழு பலனைப் பெற 20 முதல் 40 நிமிடங்கள் வரை செய்யலாம். முத்திரை செய்யும் போது எதற்கு செய்கிறோம் என்பதை மனதில் இருத்தி , சாப்பாட்டிற்கு முன் செய்ய வேண்டும்.

இப்போது அபான வாயு முத்திரை என்று அழைக்கப்படும் இதயதுக்கான முத்திரையை எப்படி செய்வது என்று பார்ப்போம். ஆள்காட்டி விரல் நுனியை, கட்டை விரல் அல்லது பெரு விரலின் அடி நுனியில் வைக்க வேண்டும். பிறகு நடு விரல், மோதிர விரல் இரண்டையும் மடித்து மத்தியில் பெரு விரலை அவற்றின் நுனிகள் தொட்டுக் கொண்டிருக்கும்படி செய்ய வேண்டும். அழுத்தம் அவசியமில்லை. சுண்டு விரல் நீட்டிக் கொண்டிருக்க வேண்டும்.

இதய வலி, மூச்சுத் திணறல், நடு முதுகு வலி, அதிக வியர்வை போன்ற மாரடைப்புக்கான அறிகுறிகள் தெரிந்தவுடனேயே, நோயுற்றவரை மருத்துவ மனைக்கு அழைத்துச் செல்வதற்கு முன்பாக இந்த முத்திரையை செய்ய வைக்க வேண்டும். தொடர்ந்து 20 நிமிடங்கள் இதைச் செய்துவிட்டால் அடுத்த 4 மணி நேரத்திற்கு இதயத்தில் எந்த தொந்தரவும் வராது. இதனால் தான் இந்த முத்திரைக்கு "ம்ருத்ய சஞ்சீவி" என்ற பெயரும் உண்டு.

இந்த முத்திரையைத் தொடர்ந்து செய்வதால் இதய அடைப்பு, நெஞ்சு வலி, இதய நோயினால் ஏற்படும் மூச்சுத் திணறல் ஆகியவற்றைத் தடுக்கலாம். இதய வால்வுகள் நன்கு இயங்கும். இதய ஓட்டம் சரியாகும். இந்த அபான வாயு முத்திரையை செய்யும் போது ஒருவர் வழக்கமாக சாப்பிடும் மாத்திரை ,மருத்துகளை தொடர்ந்து எடுத்துக் கொள்ளலாம் .

இந்த முத்திரை வாத நோய், வாயு பிடிப்பு போன்ற மற்ற வாயு பிரச்சனைகளையும் நீக்கும். மலச்சிக்கல் தீரும். தேவையற்ற அனைத்து கழிவுகளையும் நீக்கும்.

தினமும் தவறாமல் அபான வாயு முத்திரையை செய்து வந்தால் உடல் சார்ந்த தொல்லைகளில் இருந்து இலகுவாக விடுபடலாம் .