தொடர்கள்
மருத்துவம்
கர்ப்பபை மாற்று அறுவை சிகிச்சை ! – ஆர்.ராஜேஷ் கன்னா

2022112317264398.jpg

திருமணமான புது தம்பதிகளுக்கு குழந்தை பிறப்பு என்பது வரம் என்றே சொல்ல வேண்டும். புது தம்பதிகள் குறிப்பிட்ட ஒராண்டு அல்லது இரண்டு ஆண்டுகளுக்குள் குழந்தை பாக்கியம் கிடைத்து விட்டால் மகிழ்ச்சியில் திளைப்பார்கள் .

குழந்தை பிறப்பு தள்ளிப்போனால் தம்பதிகள் பாடு திண்டாட்டம் தான். சொந்தம் பந்தம் உட்பட வீட்டாரிடம் என்ன விசேஷம் என்று கேட்டு நச்சரிக்க தொடங்கி அதுவே மிகபெரிய டென்ஷனை உண்டாக்கி விடும்.

சென்னை அண்ணா நகரிலிருந்து கோயம்பேடு வரைக்கும் சில நாட்களுக்கு முன்பு காரில் பயணிதேன் . சாலையின் இரு பக்கங்களிலும் புதியதாக முளைத்த செயற்கை கருவுறுதல் மருத்துவமனைகள் புற்றீசல் போல் முளைத்து ஃபைவ் ஸ்டார் ஹோட்டல் ரேன்சுக்கு வண்ண விளக்குகள் மின்னி கொண்டிருந்தது. பல தம்பதியினர் கைகளில் மருத்துவ பைல்களை எடுத்துகொண்டு இந்த மையங்களுக்கு சென்று வருவதை ஆச்சர்யத்துடன் பார்த்த வண்ணம் பயணித்தேன்.

முன்பெல்லாம் சென்னையில் செயற்கை கருவுறுதல் மையம் எங்கோ ஒன்றிரண்டு இருக்கும் . இப்போது சென்னை முழுவதும் இந்த மையங்கள் புதியதாக தொடங்கப்பட்டு விட்டது.ஒரு புறம் மருத்துவ தொழில் வணிக மயமாகி விட்டதா என்று எண்ணி முடிப்பதற்க்குள் ,இந்த மையங்கள் எல்லாம் வளர காரணம் திருமணமான தம்பதிகளை அவரவர் உறவினர்கள் என்ன இன்னும் குழந்தை பிறக்க வில்லையா என்று நிர்பந்திப்பதும் ஒரு காரணம் என்று தெரிந்துகொண்டோம்.

இயற்கையாக கருத்தரிக்க முடியாதவர்களுக்கு இந்த IVF என்னும் செயற்கை கருத்தரித்தல் முறை பயனுள்ளது என்றாலும் இதில் உள்ள சில பிரச்சனைகள் கருவுற செல்லும் பெண்ணிற்கு தொல்லைகள் உண்டாகும். IVF என்னும் செயற்கை கருத்தரித்தல் முறைக்கு பெண்ணிற்கு மாதவிடாய் சரியாக ஏற்பட வேண்டும் என்பது முக்கிய நிபந்தனையாக மருத்துவர்கள் கருத்தாக உள்ளது.

20221123172808249.jpg

IVF என்னும் செயற்கை கருத்தரித்தல் சிகிச்சைக்கு முக்கியம் வளர்ச்சி அடைந்த பெண் கரு முட்டைகள் மிக நுட்பமாக சேகரிக்கப்படுகிறது. பின் கரு முட்டையானது பரிசோதனைக் கூடத்தில் ஆணின் விந்தணுக்களின் மூலம் கருத்தரிக்கப்படுகிறது, அதன் பின் கருத்தரித்த முட்டை பெண்ணின் கர்ப்பப்பைக்குள் வைக்கப்படுகிறது. இந்த நடைமுறை இரண்டு வாரங்கள் ஆகலாம்.

IVF என்னும் செயற்கை கருத்தரித்தல் சிகிச்சை முறையை மேற்கொள்ள அதிக நாட்கள் அல்லது நேரம் எடுத்துக் கொள்ளும் என்ற புரிதல் தம்பதிகளுக்கு அவசியம் என்பது நிதர்சனம்.

IVF என்னும் செயற்கை கருத்தரித்தல் சிகிச்சை சற்று விலை உயர்ந்த காஸ்ட்லியான சிகிச்சை முறையாகவும் இருக்கிறது. அதனால் சாமானிய மக்களால் இந்த முறை முலம் குழந்தை பெற்றுகொள்ள முடியாத சூழ்நிலை உள்ளது என்பது நிஜம்.

IVF என்ற முறையில் பெண்ணை கருவுற செய்யும் போது தரப்படும் ஆங்கில மருந்துகளின் அளவு சற்று கூடுதல் டோசாக கூட இருக்கும் . அப்போது பெண்ணுக்கு வயிற்று வலி, வயிற்றுப்போக்கும் , உடலில் உஷ்ணம் அதிகரிப்பு ,தலைவலி, மனநிலையில் அதிகம் மாற்றம் ஏற்பட்டு பிரச்சனைகள் அதிகரித்து அசௌகரியத்தை ஏற்படுத்தும் .

இந்த முறையில் கருவுறுதல் கண்டிப்பாக நிகழும் என்று உறுதியாக எந்த மருத்துவராலும் உறுதியாக சொல்ல முடியாது. அப்படியே கருவுற்றாலும் முழு கரு வளர்ச்சி அடையும் வரை கருவுற்றிருக்கும் பெண்ணை கண்ணை இமை காப்பது போல் அவரது பெற்றோர்கள் அல்லது மாப்பிள்ளை வீட்டார் பார்த்துகொள்வது தான் முக்கியம் . இதில் கருவுற்றிருக்கும் பெண்ணின் மனநிலையை பாதிக்காமல் பக்குவமாக பார்த்து கொள்வது தான் பிரதானம் என மருத்துவர்கள் சொல்கிறார்கள் .

பல நேரங்களில் பெண்ணிற்கு செயற்கை கருத்தரிக்கும் போது சில நாட்களில் கருச்சிதைவு ஏற்படும் நிலைமையும் வரலாம். அப்போது இதற்காக செலவு செய்த தொகைகள் மற்றும் முயற்சிகள் எல்லாம் வேஸ்டாக போக கூடிய வாய்ப்பும் உண்டு .

செயற்கை கருத்தரிக்கும் முறை முலம் பிறக்கும் சில குழந்தை மிக குறைவான எடை அல்லது சரியான எடையின்றி பிறப்பது போன்ற காரணங்களால் இவ்வாறு பிறக்கும் குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தியும் மிகவும் குறைவாக இருப்பது மருத்துவர்களை கவலையடைய செய்துள்ளது.

செயற்கை கருத்தரிக்கும் முறை முலம் ஓன்றிற்கு மேற்பட்ட கரு வளர்ச்சி கருமுட்டையின் உள்ளே நிகழும் போது இரட்டை குழந்தைகள் பிறக்கும் சாத்தியம் உண்டு.இதனால் நீண்ட நாட்களாக குழந்தைபாக்கியம் இல்லாத தம்பதிகளுக்கு இந்த செயற்கை கருதறித்தல் வரப்பிரசாதமாக இருக்கிறது .

செயற்கை கருத்தறிக்கும் மையத்திற்கு சென்று பல தடவை முயற்சி செய்தும் அனைத்தும் தோல்வியில் முடிந்த தம்பதிகள் படும் வேதனை எழுத்தில் வடிக்க முடியாது .

இனி குழந்தை பிறக்க வாய்ப்பில்லை என்ற நிலையில் இருக்கும் தம்பதிகளுக்கு தற்போது கொஞ்சம் காஸ்லிடியான தொழில் நுட்பத்தில் சென்னை மருத்துவமனை ஒன்று புதிய முறையினை கண்டுபிடித்துள்ளது.

அதாவது பெண்ணிற்கு ஹைப்போபிளாசியா - கர்ப்பபை வளர்ச்சியடையாத அல்லது இல்லாத ஒரு நிலையில் இருப்பவர்களுக்கு அவர்களது உறவினர் கர்ப்பபையை அறுவை சிகிச்சை முலம் அகற்றி எடுத்து அதனை குழந்தை பிறக்க காத்திருக்கும் பெண்ணின் வயிற்றில் அறுவை சிகிச்சை செய்து வைத்து செயற்கை குழந்தை பிறக்க வைக்கும் தொழில் நுட்பத்தினை பயன்படுத்தியுள்ளனர்.

சென்னையை சேர்ந்த 28 வயது பெண், ஆந்திராவை சேர்ந்த 25 வயது பெண் இருவருக்கும் தங்களின் தாயின் கர்ப்பபையை தானமாக பெற்று அதனை இவர்களுக்கு பொருத்தியுள்ளனர். இந்த அறுவை சிகிச்சை கிட்டதட்ட ஒவ்வொருவருக்கும் 15 மணி நேரங்கள் நடந்து முடிந்தது.

இந்த இரு பெண்களுக்கும் வழக்கமான பெண்ணிற்கு உரிய சாதாரண கருப்பைகள்(Ovaries) மற்றும் ஃபலோபியன் குழாய் செயல்பாடு இருந்தது ஆனால் கருவுற செய்யும் கர்ப்பபை இல்லை என்பது மருத்துவர்கள் கண்டறிதனர்.

தமிழகத்தை சேர்ந்த பெண்ணிற்கு கர்ப்பபை மாற்று அறுவை சிகிச்சை முடிந்து 3 நாட்கள் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளார். மேற்கண்ட இருவருக்கும் கர்ப்பபை அவர்கள் உடல்கள் ஏற்றுகொண்டதும் சில மாதங்களில் இருவரும் செயற்கை முறையில் கருத்தரிக்க முடியும் அதன் பின் சிசேரியன் முலம் குழந்தை பெற்று கொள்ள முடியும் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இந்தியாவில் 5000 பெண்களில் ஒருவர் கர்ப்பபை மலட்டுதன்மையால் பாதிக்கப்படுகின்றனர். தற்போது நம் நாட்டில் வாடகைத்தாய் வணிக ரீதியாக தடை செய்யப்ப்பட்டுள்ளது.

20221123172839400.jpg

இனி குழந்தை பிறக்காது என்ற தம்பதிகளுக்கு இந்த கர்ப்பபை மாற்று அறுவை சிகிச்சை முலம் குழந்தை பெற்றுக்கொள்ளும் நிலையால் பலரின் குழந்தை இல்லாத ஏக்கம் தீரும் அத்துடன் குழந்தை பிறப்பதே இந்த மாற்று அறுவை சிகிச்சையின் உன்னத நோக்கம்.இந்த அறுவை சிகிச்சை செக் குடியரசு பேராசிரியர் ப்ரோனக் உடன் ஆன்லைனில் இணைந்து இந்த கருப்பை மாற்று அறுவை சிகிச்சைகள் நடந்தது என்று சென்னை பெரும்பாக்கத்தில் உள்ள Gleneagles Global Health City மருத்துவமனை டாக்டர் பத்மப்ரியா விவேக் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

கொஞ்சம் காஸ்ட்லியான சிகிச்சை என்றாலும் குழந்தை பாக்கியம் வேண்டி நிற்போர் வயிற்றில் பால்வார்க்கும் சிகிச்சை என்றே மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள்.