தொடர்கள்
பொது
பழைய ஆயிலை குடித்து உயிர் வாழும் மெக்கானிக்!- மா லா ஸ்ரீ

2024904171946930.jpeg

கர்நாடக மாநிலம், சிவமோகா பகுதி, பானுவார நகரை சேர்ந்தவர், 45 வயதான குமார். இவருக்கு சிறுவயது முதலே பெற்றோர், உறவினர்கள் என யாருமே இல்லை. இதனால் அவர் வயிற்றுப் பசிக்காக, கிடைத்த வேலைகளைச் செய்து வந்துள்ளார். தன்னிடம் காசு இல்லாதபோது பசித்தால், வாகனங்களில் ஏற்கனவே பயன்படுத்திய பழைய இன்ஜின் ஆயிலை, உணவுக்குப் பதிலாக குமார் குடித்து நாளடைவில் பழக்கமாக மாறிவிட்டது. தற்போது, கடந்த 25 வருடங்களாக டூ-வீலர் மெக்கானிக்காக இருந்தபடி, உணவு மற்றும் தண்ணீருக்குப் பதிலாக பழைய இன்ஜின் ஆயிலை மட்டுமே 3 வேளையும் குடித்து, குமார் உயிர் வாழ்ந்து வருகிறார்.‘நான் ஆயிலை மட்டுமே 3 வேளையும் குடித்து வருவது பலருக்கு அதிசயமாக உள்ளது. இதற்காக அவர்களிடம் நான் நேரடியாக பழைய இன்ஜின் ஆயிலை குடித்து காண்பித்துள்ளேன். எனது கஷ்டத்தை புரிந்துகொண்டு, ஒரு சிலர் பண உதவி செய்துள்ளனர். இரு சக்கர வாகனத்தின் பழைய இன்ஜின் ஆயிலை மட்டுமே கடந்த 25 ஆண்டுகளாக 3 வேளையும் குடித்து வருகிறேன். இதைத் தவிர, நான் உணவோ அல்லது குடிப்பதற்கு தண்ணீரோ எடுத்துக் கொள்வதில்லை. கடந்த 13 ஆண்டுகளாக சபரிமலைக்கும் நான் நடந்து சென்று வருகிறேன்!’’ என்று மெக்கானிக் குமார் தெரிவித்தார்.