திருவாய்மொழி 1.1.7ஆம் பாசுரம்
திட விசும்பெரி வளி
நீர் நிலம் இவை மிசை
படர் பொருள் முழுவதுமாய்
அவை அவைதொறும்
உடல் மிசை உயிர் எனக்
கரந்தெங்கும் பரந்துளன்*
சுடர் மிகு சுருதியுள்
இவையுண்ட சுரனே.
-நம்மாழ்வார் திருவடிகளே சரணம்
திருவாய்மொழி 1.1.8ஆம் பாசுரம்
சுரர் அறிவரு நிலை
விண் முதல் முழுவதும்
வரன் முதலாய் அவை
முழுதுண்ட பர பரன்
புரம் ஒரு மூன்றெரித்து
அமரர்க்கும் அறிவியந்து
அரன் அயன் என
உலகழித்தமைத்துளனே
-நம்மாழ்வார் திருவடிகளே சரணம்
திருவாய்மொழி 1.1.9ஆம் பாசுரம்
உளன் எனில் உளன்
அவன் உருவம் இவ்வுருவுகள்
உளன் அலன் எனில்
அவன் அருவம் இவ்வருவுகள்
உளன் என இலன் என
இவை குணம் உடைமையில்
உளன் இரு தகைமையொடு
ஒழிவிலன் பரந்தே.
-நம்மாழ்வார் திருவடிகளே சரணம்
திருவாய்மொழி 1.1.10ஆம் பாசுரம்
பரந்த தண் பரவையுள்
நீர்தொறும் பரந்துளன்
பரந்த அண்டம் இதென
நில விசும் பொழிவுற
கரந்த சில் இடந்தொறும்
இடம் திகழ் பொருள் தொறும்
கரந்தெங்கும் பரந்துளன்
இவையுண்ட கரனே.
-நம்மாழ்வார் திருவடிகளே சரணம்
திருவாய்மொழி 1.1.11ஆம் பாசுரம்
கர விசும்பெரி வளி
நீர் நிலம் இவை மிசை
வரனவில் திறல் வலி
அளி பொறையாய் நின்ற
பரன் அடிமேல்
குருகூர்ச் சடகோபன் சொல்
நிரனிறை ஆயிரத்து
இவை பத்தும் வீடே.
-நம்மாழ்வார் திருவடிகளே சரணம்
Leave a comment
Upload