தொடர்கள்
பொது
மீண்டும் சுஜாதா - அரஸ்

20221117083804804.jpeg

சுஜாதவின் மூத்த மகன் ரெங்க பிரசாத்துடன் நம் அரஸ்.

சமீபத்திய வாட்சப் செய்தி ஒன்று பிரபல ஓவியர் அரஸிடமிருந்து.

"சினிமாவில்தான் அப்பா மகன்னு டபுள் ஆக்‌ஷன் பார்த்திருக்கோம்....நிஜத்தில் பாருங்க....சுஜாதா சாரின் மூத்த மகனுடன்......இன்று..."

அச்சு அசல் டபுள் ஆக்டிங் கொடுக்கும் சுஜாதாவே தான்.

20221117084058149.jpeg

சுஜாதா சாரின் துணைவியாரைப் பார்க்க சென்றிருந்த சந்திப்பை பகிர்ந்து கொண்டார் அரஸ்.

ஆஸ்பத்திரிக்கு ஒரு முறை சென்றிருந்த போது அவரது துணிமணிகளை மாற்றிக் கொண்டு மருத்துவமனை உடையில் இருந்தார் சுஜாதா. பின்னர் தேடிய போது அவரது பேண்ட் சர்ட்டை யாரோ ரசிகர்கள் எடுத்துக் கொண்டு போயிருந்தனராம்.

எப்போழுது எந்த நேரத்தில் கதை விவாதம் என்று ஏதேனும் இளைஞர்கள் கூப்பிட்டால் என்ன ஏது என்று கேட்காமல் சட்டையை மாட்டிக் கொண்டு கிளம்பி விடுவாராம்.

பேசிக் கொண்டேயிருக்கையில் உள்ளிருந்து ஒரு இளைஞர் வந்தார். ஒரு நிமிடம் ஸ்தம்பித்து விட்டேன். அப்படியே இளவயது சுஜாதா வந்து நிற்பது போல ஒரு பிரமை.

அவர் ரங்க பிரசாத். மூத்த மகன். அமெரிக்க கிரீன்கார்டு இருந்தாலும் அம்மாவை பார்த்துக் கொள்ள வேண்டும் என்று சென்னையில் இருக்கிறாராம்.

இரண்டாவது மகன் ஜப்பானில் இருக்கிறார்.

மகன்கள் இருவரும் அப்பாவின் கதைகளை யாருக்கும் தரம் தெரியாமல் கொடுக்க வேண்டாம். நல்ல விதமாக படம் எடுப்பவர்களுக்கு மட்டும் கொடுங்கள். அவர் எழுதி உருவாக்கி வைத்திருக்கும் அற்புதமான கதைகளை யாரும் கெடுத்து விடக் கூடாது என்று அறிவுருத்துகிறார்களாம்.

சுஜாதாவே பல முறை இதைக் குறிப்பிட்டு எழுதியே புலம்பியிருக்கிறார். சினிமாவுக்காக பல விஷயங்களை மாற்றுவதில் நம்மாட்கள் கில்லாடிகள்.

வசந்தாக பிரியா படத்தில் நடிக்க வைத்த நடிகரை இன்னமும் கூட நம்மால் ஏற்றுக் கொள்ளவே முடியாது.

சுஜாதா.... தமிழ் கூறும் நல்லுலகம் என்றுமே சுஜாதாவின் பெயர் கூறும்.