தொடர்கள்
கவிதை
பறவையின் அனுக்ரஹம் -மகா

20221115213832242.jpg

அம்மன் கோவிலின்

வேப்ப மரக் கிளைகளில்

பிள்ளை வரம் வேண்டி

கட்டப்பட்ட

குட்டித் தொட்டிலொன்றில்

இனம் தெரியாப்

பறவையொன்று

முட்டையிட்டுக்

குஞ்சு பொரித்தது.