தொடர்கள்
தொடர்கள்
மக்கள் பார்வையில் கம்பர் - 18 -ரமேஷ்எத்திராஜன்

20221109175248289.jpg

மக்கள் பார்வையில் கம்பர்

பாலகாண்டத்தின் வேள்விப்
படலத்தின் கவிச்சக்கரவர்த்தி பாடல்

இவ்வண்ணம் நிகழ்ந்த வண்ணம்
இனி இந்த உலகுக்கு எல்லாம்
உய் வண்ணம் அன்றி மற்று ஓர்
துயர் வண்ணம் உறுவது உண்டோ
மை வண்ணத்து அரக்கி போரில்
மழை வண்ணத்து அண்ணலே உன்
கை வண்ணம் அங்குக் கண்டேன்
கால் வண்ணம் இங்குக் கண்டேன்

இச் செய்தி நிகழ்ந்த வண்ணம் ராமா நீ இந்த உலகில்
பிறந்து தீயவரை அழித்து நல்லவர்களை
பாதுகாத்தல் என்பது ஏற்பட்ட
பிறகு

மேகம் போன்ற இராமனே
வருகின்ற வழியில் வனத்தில்
அஞ்சனம் போன்ற கரிய நிறத்தை
உடைய தாடகையோடு செய்த
போரில் உன் கையின் திறத்தை
பார்த்தேன்
அகலிகை சாப விமோசனத்தில்
உன் திருவடி திறத்தைக் கண்டேன்

மழை வண்ணத்து அண்ணல்
குளிர்ந்த தன்மையுடைவன்
கைம்மாறு கருதாது கருணையை
மழையாகப் பொழிபவன்
என எளிமையாக புரியும்படி
உரைத்தது மிகச்சிறப்பு

மை வண்ணத்து அரக்கி
கொலை வஞ்சனை முதலிய
தீய பண்புகளுக்கு உரைவிடம்
என உவமை நயமாக உரைத்த
கவிக்கம்பரை போற்றுவோம்
பாராட்டுவோம்

மீண்டும் சந்திப்போம்...