தொடர்கள்
கவிதை
யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து

20240205180510410.jpg

இளகும் இரும்பு

உருக்கும் அன்பு

தேறிடும் தெளிவு

தேற்றிடும் பேராண்மை

உண்மையான உறவு

தோள் கொடுக்கும் தோழி

மன்னிக்கும் மகராசி

தன்னம்பிக்கை தங்கை

ஆலோசனை தரும் அக்கா

அரவணைக்கும் அதிகாரி

ஆர்ப்பரிக்கும் சூறாவளி

திடமான திருமதி

குதூகலமான குழந்தை

சர்வமுமான சக்தி

தவிக்கும் தாய்மை

தயங்கும் உண்மை

பண்பான பாட்டி

சுறுசுறுப்பான சுட்டி

நற்பண்பான நேர்மை

தூய்மையான நேசம்

மிடுக்கான மிஸஸ்

துடுக்கான துணைவி

அளவில்லா ஆறுதல்

பக்திபிரவாகம் எடுக்கும் ஊற்று

எல்லாமுமான தாய்மை

ஆச்சரியமான ஆசிரியை

கருணைபொங்கும் நீர்வீழ்ச்சி

ஓடிக்கொண்டே இருக்கும் நதி

அலை கடல் போல பரந்த மனது

வற்றாத வாஞ்சை

நளபாக சக்கரவர்த்தினி

நோய் தீர்க்கும் மருத்துவர்

சோர்வு இல்லாத சேவகி

அழகிய அணங்கு

அறிவான அவ்வை

தேடல் உள்ள தேவதை

சீற்றம் ஆகும் சீமாட்டி

கருத்துள்ள காரிகை

தாங்கிப் பிடிக்கும் தாரம்

நயமான நங்கை

அற்புதமான அரசி

கற்பனையின் காதலி

மகிழ்வைத் தரும் மகள்

ஈடில்லா இளவரசி

நிறைவைத் தரும் நித்திலம்

அனைத்திற்கும் ஆணி வேர்

அடிக்கடி நேர் எதிர்

எப்போதும் புரியாத புதிர்

இவளுக்கு நிகர் யார்?

இவளேதான்!!!!