தொடர்கள்
வலையங்கம்
ஜாதி நெருப்பு

சட்டம் சிரிக்கத்தான் செய்யும்

20230012191802531.jpg

சில வாரங்களுக்கு முன்பு... புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஒன்றியத்துக்கு உட்பட்ட வேங்கை வயல் கிராம குடிநீர் தொட்டியில் மலத்தைக் கலந்து பட்டியல் இனத்து மக்கள் மீது தங்கள் வெறுப்பை காட்டி இருக்கிறது ஒரு ஜாதி வெறி. அநாகரிக கும்பல்.அதே பகுதியில் பட்டியலின மக்களை கோயிலுக்குள் அனுமதிக்க மாட்டோம் என்று ஒரு குறிப்பிட்ட ஜாதியினர் தடுத்து நிறுத்த அதன் பிறகு மாவட்ட ஆட்சித் தலைவர், காவல்துறை கண்காணிப்பாளர் என்ற இரண்டு பெண் அதிகாரிகள் துணிச்சலுடன் கோயிலுக்கு சென்று கோயிலை திறக்க வைத்து பட்டியலின மக்களை சாமி தரிசனம் செய்ய வைத்தனர். இது போன்ற சம்பவங்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாக தொடர்ந்து நடந்த வண்ணம் தான் இருக்கிறது. இன்னும் பல இடங்களில் இரு குவளை முறை ஒழிக்கப்படவில்லை என்பது கசப்பான உண்மை ஜாதி ஒழிப்போம் மதச்சார்பற்ற என்ற வார்த்தை ஜாலங்கள் எல்லாம் மேடைக்கு வேண்டுமானால் கைதட்ட பயன்படும் நமக்குள் இன்னும் அந்த ஜாதி நெருப்பு எரிந்து கொண்டுதான் இருக்கிறது என்பதற்கு சாட்சி தான் இந்த சம்பவங்கள் ஜாதி ரீதியான சங்கங்கள் ஜாதி வாரி இட ஒதுக்கீடு இவையெல்லாம் தான் இந்த கேவலத்துக்கு முக்கிய காரணம் சட்டம் மூலம் இந்தக் கொடுமைகளை நம்மால் ஒழிக்க முடியாது. இப்போது தேவை சட்டம் அல்ல மாறிய சமூகம் தான் எல்லோரும் சமம் என்ற உண்மையை உள்ளபூர்வமாக உணர்கிற சமூகம்தான் நமக்கு தேவை அதுவரை இந்த சட்டங்கள் நம்மைப் பார்த்து கேலியாக சிரிக்க தான் செய்யும்.