தொடர்கள்
ஆன்மீகம்
குருவே சரணம்  - 013 - ஸ்ரீநிவாஸ் பார்த்தசாரதி

20230005133332467.jpg

ஸ்ரீ மகா பெரியவாளின் பூர்வாஸ்ரம தம்பி ஸ்ரீ சிவன் சார் அவர்களின் அனுகிரஹங்களும், அவருடன் பயணித்தவர்கள்,அவரை தரிசித்தவர்கள் அனுபவங்களை நாம் இந்த வாரம் முதல் தொடர்ந்து பார்ப்போம். நாம் தரிசிக்கும் ஒவ்வொரு அனுபவமும் நம்மை ஸ்ரீ சிவன் சார் அவர்களிடம் ஏதோ ஒரு விதத்தில் தொடர்பை ஏற்படுத்தும்.

சிவன் சார் அவர்களின் தரிசனம்

ஸ்ரீமதி காந்தி மாமி

அந்த காலத்தில் சிவன் சார் அவர்களை தரிசனம் சர்வ சாதாரணமாக பல அதிஷ்டசாலிகளுக்கு கிடைத்துள்ளது. அவர்களில் ஒருவர் தான் காந்தி மாமி .

ஸ்ரீ மகா பெரியவாளின் தம்பி இவளவு பெரிய மஹான் என்பது அப்போதே விட இப்போது தெரிகிறது . நான் இருக்கும் போதை விட நான் இறந்த பிறகு தான் என்னுடைய மதிப்பு இன்னும் அதிகமாகும் என்று அன்றி அவர் சொன்னது எப்பேர்ப்பட்ட சத்திய வாக்கு .

தன்னுடைய போட்டோ கேட்ட மாமிக்கு தான் எழுதி கொண்டிருந்த டைரியை கொடுத்து பத்திரமாக வைத்துக் கொள்ள சொல்லி அதனை 33 வருடங்கள் கழித்து சிவசாகரம் இல்லத்தில் சேர்த்துள்ளார்.

எப்பேர்ப்பட்ட அதிசயம்.