தொடர்கள்
தொடர்கள்
மக்கள் பார்வையில் கம்பர் - 12 -ரமேஷ்எத்திராஜன்

20221109175248289.jpg

மக்கள் பார்வையில் கம்பர்

கோசல நாட்டின் செல்வச்செழிப்பை
விளக்கும் பாலகாண்டத்தின்
நாட்டுப் படலப் பாடல்

வரம்பு எலாம் முத்தம் தத்தும்
மடை எலாம் பணிலம் மா நீர்க்
குரம்பு எலாம் செம்பொன் மேதிக்
குழி எலாம் கழுநீர்க் கொள்ளை
பரம்பு எலாம் பவளம் சாலிப்
பரப்பு எலாம் அன்னம் பாங்கர்க்
கரம்பு எலாம் செந்தேன் சந்தக்
கா எலாம் களி வண்டு ஈட்டம்

வயல் வரப்பகளிலெல்லாம் முத்துக்கள்
தண்ணீர் பாயும் மடைகளில் சங்குகள்
நீர்ப் பெருக்குடைய கரைகளில்
செம்பொன்
எருமைக் கால் பதிந்த பள்ளங்களில்
செங்கழு நீர் மலர்கள்
பரம்படித்த இடங்களில் பவளங்கள்

நெற்பயிர் நிறைந்த பரப்புகளில்
அன்னங்கள்
சாகுபடி செய்யப்படாத நிலங்களில்
செந்தேன்
அழகிய சோலைகளில் மதுவுண்டு
மகிழும் வண்டுகளின் கூட்டம்
என்பதே இப்பாடலின் பொருள்

கோசல நாட்டின் வளத்தை எளிமையாக
மக்களுக்குப் புரியும் படி
முத்துக்கள் பூத்த பரப்புகள்
சங்குகள் வார்த்த மடல்கள்

மலர்களாய் எருமையின் கால்தடம்
செந்தேன் பெருகிய தரிசுகள்
சோலைத்தேன் மயக்கத்தில்
வண்டுகள்

கொம்புத்தேன் சொற்சுவை பாடல்களில்
கம்பனின் கற்பனைக்குக் கரையில்லை
கம்பனின் தமிழுக்கு ஈடில்லை


மீண்டும் சந்திப்போம்....