தொடர்கள்
ஆன்மீகம்
குருவே சரணம்  - 084 - ஸ்ரீநிவாஸ் பார்த்தசாரதி

20240416092235286.jpeg

ஸ்ரீ மகா பெரியவாளின் பூர்வாஸ்ரம தம்பி ஸ்ரீ சிவன் சாரின் அனுகிரஹங்களும், அவருடன் பயணித்தவர்கள்,அவரை தரிசித்தவர்கள் அனுபவங்களை நாம் வாரம் தோறும் தொடர்ந்து பார்த்துவருகிறோம் . நாம் தரிசிக்கும் ஒவ்வொரு அனுபவமும் நம்மை குரு பக்தியில் ஆழ்த்தி ஏதோ ஒரு விதத்தில் தொடர்பை ஏற்படுத்தும். இந்த வாரம் முதல் பகவான் ஸ்ரீ ரமண மகரிஷி அவர்களின் பக்தர்களின் அனுபவங்களை பார்ப்போம்

ஸ்ரீ ராஜபாளையம் ரமணி அம்மாள்

தனது இளம் வயதில் ஸ்ரீ பகவானின் புத்தகத்தை தொட்ட கணத்தில் ஈர்க்கப்பட்டு படித்து அவரிடம் தஞ்சம் அடைந்த பக்தை. ஸ்ரீ பகவான் தனது பக்தையின் பக்தியை உணர்ந்து அவருக்கு அனுக்கிரஹம் செய்த விதத்தை அவர் விவரிக்கும்போதே நமக்குள்ளும் ஸ்ரீ ரமணரின் பக்தி உணரமுடிகிறது.

இந்தவார அனுபவ காணொளி இதோ