1. மனிதனின் மகத்தான கண்டுபிடிப்பாக எதை கருதுவீர்கள்?
சக்கரம்... கண்டுபிடித்தவன் மகாஜனியஸ். கல் பாறையில் இருந்தே அதை அவன் செதுக்கி இருக்க வேண்டும். சக்கரம் இல்லாத உலகத்தை சற்று கற்பனை பண்ணிப் பாருங்கள்!
2.பேலியோ டயட்டில் நம்பிக்கை உண்டா?
எனக்கு 'டயட்'டிலேயே நம்பிக்கை கிடையாது. அது குறித்து என் மகள்களுக்கு என் மேல் கோபம் கூட உண்டு.
3.மோடி ரிட்டையர்டு ஆன காலத்தில் என்ன செய்வார்?
மோடி கொடிகட்டி பறந்து கொண்டிருக்கிறார், இவ்வளவு சீக்கிரம் ரிடையர் ஆவார் என்று கற்பனை செய்கிறீர்களே?! புதிதாக அமெரிக்க ஸ்டைலில் ஜனாதிபதி பதவியை மாற்றி அமைத்து,அதைக் கூட அவர் வகிப்பாரோ என்று எனக்கு ஒரு சந்தேகம் உண்டு?! நீங்க வேற!
4.புளியோதரைக்கு பொருத்தம் உருளைக்கிழங்கு வறுவலா? இல்லை சிப்ஸா?
புளியோதரைக்கு பெஸ்ட் பொரித்த அப்பளம் தான். ஆமாம், நீங்கள் சொல்கிற இரண்டும் ஒன்றுதானே?!
5.வீடியோ கேம் விளையாடுவீர்களா?
எனக்கு டி.வியை தேமே என்று பார்க்க மட்டுமே தெரியும்.வீடியோ கேம் 'மூளை' எல்லாம் எனக்கு கிடையாது.
தொகுப்பு: வேங்கடகிருஷ்ணன்
வாசகர்கள் தங்கள் கேள்விகளை மதன் சாருக்கு அனுப்ப வேண்டிய இ-மெயில் முகவரி: info@vikatakavi.in
Leave a comment
Upload