தொடர்கள்
அனுபவம்
ஶ்ரீ ரங்கம் ஆலயத்தில் மோடி - தலைமை அர்ச்சகரிடம் என்ன பேசினார் ?? ஆர்.ராஜேஷ் கன்னா

20240020193630884.jpeg
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் ஆலயத்திற்கு பிரதமர் மோடி வருகை தந்தார். அப்போது ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் தலைமை அர்ச்சகர் பிரதமர் மோடியை வரவேற்று அவருக்கு மரியாதை செய்து பெரிய பெருமாள் தரிசனத்திற்கு அழைத்து சென்றார். பிரதமர் வருகையின் நோக்கம் அயோத்தியில் ராம்பிரான் கோயில் துவக்க விழாவிற்கு முன்பு ஸ்ரீரங்க நாதரை சந்திக்க வேண்டி ஸ்ரீரங்கம் வந்து சென்றார்.

20240020193744461.jpeg
பிரதமர் மோடி பயபக்தியுடன் பெரிய பெருமாளை சேவித்து விட்டு சென்றார். தலைமை அர்ச்சகரை தொடர்பு கொண்டு பேசினோம்.

20240020194132167.jpeg

என்ன சொன்னார் பிரதமர் ?? ஆவலை அடக்க முடியாமல் !! அதற்கு தலைமை அர்ச்சகர் சொன்னார்…..

இப்படி ஒரு உலகத் தலைவரை அருகே பார்த்தது எனக்கு பிரமிப்பாக இருந்தது. அதை விட அவர் ஒவ்வொரு சன்னதி வாசலிலும் பிரார்த்தனை செய்த பாவனை மேலும் வியப்பாகவும் தெய்வீகமாகவும் இருந்தது.

ராமனின் குலதெய்வம் ரங்கநாதர். இவரை சேவித்து விட்டுத் தான் அங்கே அயோத்தியாவில் பிராணபிரதிஷ்டை தொடருவார் பிரதமர்.

முழு ஆடியோவிற்கு கீழே ஒலிப் பதிவை கிளிக்கவும்.