தொடர்கள்
அரசியல்
கருத்துக்கதிர்வேலன்

20230622002051254.jpeg

டாஸ்மாக் மதுபான விலை உயர்வு அறிவிப்பு.

மகளிர் உரிமைத் தொகைக்கு பணம் வேணுமே குடும்பத் தலைவர் கிட்ட வாங்கி குடும்பத் தலைவிக்கு தருவாங்க.

தமிழக பாரதிய ஜனதா துணைத் தலைவர் நைனார் நாகேந்திரனின் மகன் 100 கோடி பத்திரப்பதிவு ரத்து, பத்திரப்பதிவு துறை தலைவர் அதிரடி நடவடிக்கை.

அமலாக்கத்துறை நடவடிக்கைக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் கிடையாது இப்பவே சொல்லி விட்டேன்.

காவிரியில் இருந்து உரிய நீரை திறக்க கர்நாடகாவுக்கு உத்தரவிட வேண்டும் மத்திய நீர்வளத் துறை அமைச்சருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்.

நேற்று கர்நாடகா முதல்வரை பார்த்தீங்க பூக்கூடை எல்லாம் தந்தாரு அப்பவே அவரிடம் நேரில் பேசி இருக்கலாமே.

முதல்வருடன் அமைச்சர் பொன்முடி சந்திப்பு.

அமலாக்கத்துறை அனுபவங்கள் பற்றி சொல்லி இருப்பார்.

330 இடங்களில் கூட்டணி வெற்றி பெறும் எடப்பாடி பழனிச்சாமி.

டெல்லியில் இருந்து அப்படி சொல்ல சொல்லி அனுப்பி இருப்பாங்க அதுதான் அவர் சொல்றாரு

தக்காளி விலை உயர்வு குறித்து முதல்வர் கவலைப்படவில்லை முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார்.

அவர் டாஸ்மாக் விலை உயர்வு பற்றி கூட தான் கவலைப்படவில்லை.

அதிமுக தலைமையில் தான் தமிழ்நாட்டில் கூட்டணி எடப்பாடி அறிவிப்பு.

அண்ணாமலை ஊர்ல இல்லையா !

மிரட்டல்களுக்கு அஞ்சப்போவதில்லை முதல்வர் மு.க.ஸ்டாலின்.

இப்படி பொன்முடி சொல்வாரா ? செந்தில் பாலாஜி சொல்வாரா ?

ஆன்லைன் விளையாட்டுகளை தடை செய்து சட்டம் இயற்ற தமிழக அரசுக்கு அதிகாரம் இல்லை சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு வாதம்

அப்ப நீங்க தடை பண்ணுங்க.

அமலாக்கத்துறைக்கு எங்களது கிளைக் கழகச் செயலாளர்கள் கூட பயப்பட மாட்டார்கள் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.

சும்மா இப்படி சொல்லிட்டு அப்புறம் இதயத்தில் அடைப்பு டாக்டர் கூப்பிடுங்கனு அழக்கூடாது.

பாரதிய ஜனதாவுக்கு எதிராக எளிதில் ஒன்றுபட முடியாது சரத்பவார் பேச்சு.

அனுபவஸ்தர் சொன்னால் சரியாகத்தான் இருக்கும்.

எதிர்க்கட்சிகளின் கூட்டம் அதிகார பசியில் இருக்கும் சந்தர்ப்பவாதிகள் ஆலோசனைக் கூட்டம் பாரதிய ஜனதா.

நீங்க நல்லா சாப்பிட்டீங்க அதனால இப்படித்தான் பேசுவீங்க.

நாடாளுமன்றத் தேர்தலில் இரண்டு கொள்கைகளுக்கு இடையே தான் போட்டி ராகுல் காந்தி.

ஆனா அந்தக் கொள்கை என்ன என்று தெரியாது அப்படித்தானே ராகுல்ஜி.

அமைச்சர் பொன்முடி வீட்டில் 82 லட்சம் பறிமுதல் 42 கோடி நிரந்தர வைப்பு தொகை முடக்கம் அமலாக்கத்துறை நடவடிக்கை.

திராவிட மாடல் அரசு ஏழைகளுக்கான அரசு என்று சொன்னாங்களே