1.எப்பேர்ப்பட்ட அடாவடி பேர்வழிகளாக இருந்தாலும் வாழ்க்கையில் மனைவி என்ற ஒருத்தி வந்துவிட்டால் வருடங்கள் செல்ல செல்ல ஏன் பெட்டி பாம்பாய் அடங்கி விடுகிறார்கள்?
சிலர் மனைவியை கொடுமைப்படுத்துகிறார்களே ?என்னை கேட்டால் அதைவிட 'பெட்டி பாம்பு' பெட்டர்! இருவரும் விட்டுக் கொடுத்து ஒற்றுமையாக வாழ்வது பெஸ்ட்!!.
2. தற்கொலை செய்து கொள்பவர்கள் தூக்க மாத்திரைகள் போட்டு வழியில்லாமல் சாகாமல்,கத்தியால் கழுத்தை அறுத்துக் கொள்வது ,ரயில் முன்பு பாய்வது ,ஆசிட் குடிப்பது ,மாடி உச்சியில் இருந்து குதிப்பது போன்ற கொடூர வழிகளை ஏன் தேர்ந்தெடுக்கிறார்கள்?
நான் கூட உங்களைப் போலவே சிந்தித்தது உண்டு! பல நிமிடங்கள் யோசித்து விட்டு வினாடியில் எடுக்கிற முடிவுதான் அது. என்னைக் கேட்டால் தற்கொலையே கோழைத்தனமானது. எதுவும் சரிப்பட்டு வரவில்லை என்றால் சிம்பிளாக துறவி போல திருவண்ணாமலை போன்ற நல்ல ஸ்தலங்களில் சென்று வாழ்நாளைக் கழிக்கலாமே?!
3. நித்தியானந்தா ஒரு வாரம் மதன் சாரை கைலாசவுக்கு, விடுமுறைக்கு கூப்பிடுகிறார்.உங்கள் உத்தேசம் என்ன?
"நித்தியானந்தாவுடன் ஒரு வாரம்!" எப்பேர்ப்பட்ட தலைப்பு! ஆனால் குஷாலான கைலாச வாழ்க்கையை அனுபவித்துவிட்டு கெட்டுப் போய் விடுவேனோ?! என்று தான் சற்று கவலையாக இருக்கிறதே!!
4. உண்மைக் காதலை கண்டுபிடிக்க பெண்களோ ஆண்களோ என்ன செய்ய வேண்டும்?
முதலில் காதலை வெளிப்படுத்த வேண்டும்!(நானே அதை செய்யாமல் கோட்டை விட்டு இருக்கிறேன்)அது என்ன "நானே"?!.
5. வீடு வரை உறவு காடு வரை பிள்ளை கடைசி வரை “ஸ்மார்ட் ஃபோன்” என்று சொல்லலாமா?
உயிர் இருக்கிற ஒன்றை நீங்கள் சொன்னால் தான் நான் ஏற்றுக் கொள்வேன்!.
தொகுப்பு: வேங்கடகிருஷ்ணன்
வாசகர்கள் தங்கள் கேள்விகளை மதன் சாருக்கு அனுப்ப வேண்டிய இ-மெயில் முகவரி: info@vikatakavi.in
Leave a comment
Upload