தொடர்கள்
வலையங்கம்
வலையங்கம் - ராம ராஜ்யம் அமைப்போம். !

20240017220045214.jpg

500 ஆண்டுகள் போராட்டத்திற்குப் பிறகு அயோத்தியில் மீண்டும் ராமர் கோயில். இது கிட்டத்தட்ட இந்தியாவிலுள்ள 80 கோடி இந்துக்களின் கனவு, எதிர்பார்ப்பு என்று கூட சொல்லலாம். இந்த கனவு இந்த மாதம் 22-ஆம் தேதி நிஜமாகிறது. ராமர் கோயிலுக்கு அரசியல் பார்வை தேவையில்லை ஆன்மீகப் பார்வை மட்டுமே போதும்.

ராமர் ஒரு உதாரண புருஷர் இவர் மனிதனாக அவதரித்து தன்னை எல்லா ஆசா பாசங்களுக்கும் உட்படுத்திக் கொண்டு வாழ்ந்தவர். மகாத்மா காந்தி கூட ராமராஜ்யம் அமைக்க வேண்டும் என்று தான் சொல்லி இருக்கிறார்.

தசரதன் ஆட்சி செய்த கோசல நாட்டை பற்றி பண்டிதர்கள் இப்படித்தான் குறிப்பிடுகிறார்கள். கோசல நாட்டில் வறுமை இல்லாததால் கொடையாளிகளே இல்லையாம். அந்த நாட்டுக்கு யாரோடும் பகை இல்லாததால் போர் இல்லை. அதனால், வீரர்கள் மேன்மை வெளியே தெரியவில்லையாம். பொய் பேசுபவர்கள் அங்கு இல்லாததால் உண்மை என்று ஒன்று அங்கு இல்லையாம். ராமரும் தசரதரை பின்பற்றி பல யுகங்கள் நல்லாட்சி தந்தார்.

ராம ராஜ்ஜியம் அமைப்போம் அதுதான் எல்லோருடைய எதிர்பார்ப்பு இந்த நன்னாளில் இப்படி ஒரு சபதம் ஏற்போம்.

20240020093225396.png