தொடர்கள்
கதை
முதல் காதல் - சுஶ்ரீ

20240015111320739.jpg

என் ரூம்ல உக்காந்து எழுத ஆரம்பிச்சேன், பரிமளா “என்னத்தை நினைச்சு சிரிச்சிண்டேஎழுதறேள்.”

“ இல்லைடி நேத்து கனவுல புகழ் பெற்ற வாரப் பத்திரிகை சிறுகதை போட்டில நான் முதல் பரிசுவாங்கற மாதிரியும் பெரிய எழுத்தாளர்லாம் இவ்வளவு திறமையை இத்தனை நாள் ஏன் மறைச்சுவச்சிருந்தீங்கனு பாராட்டற மாதிரியும். மாலையெல்லாம் போட்டு பண முடிப்பு கொடுக்கறா.”

பரிமளம் கழுத்தை நொடிச்சு தோள்ல இடிச்சுண்டா. “ஆசை இருக்கு தாசில் பண்ண, ஆனாஅதிர்ஷ்டம் இருக்கு எதையோ மேய்க்கனு என் அம்மா அடிக்கடி சொல்வா”

“அடியே உன்னையே குறைச்சு சொல்லிக்காதே நீ பரியாக்கும்”

“ சரி நிஜமா போட்டிக்கு எழுதறேளா, இல்லை கல்யாணப் பரிசு தங்கவேலு மாதிரியா, டீசண்டாஎழுதுங்கோ, ஃபேஸ்புக்கோ என்னவோ அதுலெல்லாம் கிறுக்கற மாதிரி வேண்டாம், வயசுக்குதகுந்த மாதிரி எழுதுங்கோ”

“நான் நன்னாதானே எழுதறேன் புதன் கிழமை எழுதின

‘கிராமத்து கட்டழகி’ கதைக்கு 32 லைக் வந்ததே”

“முதல்ல கன்னா பின்னானு எழுதறதை நிறுத்துங்கோ, பக்கத்தாத்து பங்கஜம் உன் ஆத்துக்காரர்ரொம்ப ரொமாண்டிக் டைப் கிளுகிளுப்பா எழுதறாரேன்றா.”

“ இதோ பாரு உங்கப்பா, உங்க வீடு பத்தி எழுதிண்டுன்னா இருக்கேன்”

“ ஐய்யே தெரியாதாக்கும், மாமனார் வாட்ச் போடலைனு தையாதக்கானு குதிச்சது மறக்கலைஇன்னம்”

“ இந்தா நீயே படி”

“ வேண்டாம் கண்யமா எழுதுங்கோ போறும், கிளு கிளுப்பாமே, கட்டேல போறவ என் கிட்டயேதைரியமா சொல்றா, பனியன் போட்டுண்டு வெளியே நிக்காதீங்கோன்னா கேட்டாதானேதாராசிங்னு நினைப்பு” சொல்லிண்டே போயிட்டா.

பரிமளாக்காகவாவது வேற மாதிரி கொஞ்சம் டிரை பண்ணறேன்.என் மாமனார் வீடு பழைய காலஅக்ரகாரத்துல இருந்ததா அவங்க ஹால்னு சொல்லிக்கற ஒரு பெரிய இடம், செங்கல் தெரியறசுவர்களோடவும் , சிமெண்ட் போயி குழி குழியான தரையோட இருக்கும். மேல ஓடு வேய்ந்து நடுநடுவுல உடைஞ்சு வெயில் உள்ளே வரும், மழை காலத்துல அருவியா கொட்டும். பெரிய பித்தளைகொப்பரை இருக்கே.

இந்த அக்கிரகார ஐந்தருவிகளுக்கு கீழே ஒண்ணொண்ணு உக்கார வைக்கப்படும்.நாளைக்குஆண்களெல்லாம் அங்கேயே உக்காந்து குளிக்கலாம், எவ்வளவு வசதி.அந்த கூடத்து கிழக்கு ஓரம்தாத்தா பூஜை செய்ற பகுதி அதாவது மாமனாரோட அப்பா. அந்த சுவத்துல ஒரு மதுரை மில்வெளியிட்ட காலண்டர் படம், இந்த ரவிவர்மா வரைஞ்ச லட்சுமி படம் இருக்கே ஒரு வித சாந்தமாநம்மளயே பாக்கறமாதிரி இருக்கும். அந்த படத்துக்கு கீழயே ஒரு தேக்கு மர மண்டபம்அதுக்குள்ளே ரோஸ் உட்ல செஞ்ச ராமர், லட்மணர், சீதாபிராட்டி, ஹனுமான் சிலைகள்.

எல்லாத்தையும் விட என்னை கவர்ந்தது போட் ஷேப்ல ஒரு விபூதி வைக்கற மடல்.அது நிறையபழனி சித்தநாதன விபூதி மணக்கும். இதெல்லாம் எங்கே போச்சு தெரியலை., என்ன கதையாஇது, சுவாரஸ்யமே இல்லையேனு யோசனை பண்றப்பவே ,பின்னால இருந்து,பரிமளாவோட குரல்வந்தது,”என்ன எழுதறீங்க உங்க காதல் லீலைகளா?”

“நீயே பாரேன்”

படிச்சிட்டு பரிமளா , “அந்த மகாலட்சுமிதான் புத்தி கொடுத்துருக்கா பரிசு கிடைக்காட்டாலும்புண்ணியம் கிடைக்கும்”

ஹா உள்ளே போயாச்சு.அந்த பர்வதம் கதை சொல்லலைதானே உங்களுக்கு.நான் அப்பஹைஸ்கூல் முடிச்சு காலேஜ் போக ரெடியான நேரம். என் வீட்ல இருந்து ஏழாவது வீடு சங்கரன்குடியிருக்கற வீடு.நாங்க தினம் செஸ் விளையாடுவோம் அவன் வீட்டு குட்டித் திண்ணைலஉக்காந்து. அன்னிக்கு சீக்கிரமே போயிட்டேன். சாத்தியிருந்த பிரம்மாண்டமான கதவைதள்ளிண்டு சங்கரானு கூப்டுண்டே உள்ளே நுழைஞ்சேன். ஹால்ல ஊஞ்சல்ல உக்காந்து வீசிஆடிண்டிருந்தா அந்தப் பொண்ணு. என் குரல் கேட்டதும் ஊஞ்சல் பிரேக் அடிச்சுநின்னது.வெள்ளை பாவாடை, நீலக் கலர் தாவணி, மேட்சிங்கா பிளவ்ஸ், நீளமா பின்னல், அழகுமுகம் அலட்சியப் பார்வை. என்னை ஏறிட்டு பாத்தா.

இத்தனை நாள் ஒரு பெண்ணை அருகில் ரசித்து பார்த்ததோ, பேசினதோ இல்லை. வாய்குளறியது, “நான், சங்கரன், செஸ் விளையாட எங்கே போனான்.”

களுக்னு சிரிப்பு” என்ன வாய் தந்தி அடிக்குது, என்னை பாத்த பயமா”

சமாளிச்சிட்டேன் இப்ப, “ எனக்கென்ன பயம், நீ பர்வதம், சங்கரனோட பெரிப்பா பொண்ணு, பரிட்சை எழுதிட்டு லீவுக்கு வந்திருக்கே பெங்களூர்ல இருந்து.”

“பரவாயில்லையே தெருவுல இருக்கற எல்லா பொண்ணு ஜாதகமும் மனப்பாடமோ,“ஜாக்ரதையாகி இர பேகு உடுகா பட்டாஸ் தரா இதானே”

“ஏய் பொண்ணு , தைரியம் இருந்தா தமிழ்ல திட்டு”

“உன்னை ஏன் திட்டறேன் நான் ஏதோ செய்யுள் ஞாபகப் படுத்திண்டேன்”

நான் சந்தேகமா பாத்தேன், நமட்டு சிரிப்போட உள்ளே ஓடிட்டா.

“என்னடா சீக்கிரம் வந்துட்டே, அரட்டைக் கள்ளி பாரு என்ன சொல்றா”

“ சங்கரா அவ ஏதோ கன்னடத்துல கேலி பேசறாடா.”

“ சே சே பர்வதம் நல்ல பொண்ணு துடுக்கா பேசுவா அவ்வளவுதான்.”

எங்க விளையாட்டை ஒரு ஓரமா நின்னு பாப்பா.பாத்தா சின்ன புன்முறுவல். ஒரு தடவை சங்கரன், “ பர்வதம் இவனோட நீ விளையாடு, அம்மா ஏதோ வாங்கிண்டு வரச் சொன்னா போய்ட்டுவந்துடறேன்.”

மறுப்பேதும் சொல்லாம உக்காந்தா. கத்துக்குட்டிதானேனு அலட்சியமா விளையாடினேன்.18 மூவ்ல தப்பிக்க வழியில்லை. பர்வதம், “ சாரி டியர் செக் அண்ட் மேட்னு” சொல்லிட்டு நாக்கைகடிச்சிண்டா. எழுந்து ஓடியே போயிட்டா.

என் மரமண்டைக்கு அப்ப புரியலை. அப்பறம் ஸ்ட்ரைக் ஆச்சு பேச்சு வாக்குல என்னை டியர்னுசொன்னது. என் உச்சி குளிர்ந்து போச்சு. ரெண்டு நாள் கண்ல படலை. அப்பறம் பாத்தப்ப தலைகுனிஞ்சிண்டு வெட்கத்தோட கால் கட்டை விரலால் கோலம் போட்டா.

சங்கரன் குனிஞ்சு மூவ் யோசிக்கறப்ப, அவளை பாத்து கண்ணாலயே என்னாச்சுனு கேட்டேன். ஒண்ணுமில்லைன்ற மாதிரி அழகா தலையாட்டினா. இடுப்புல இருந்து சின்ன காகித மடிப்பைஎடுத்து அகல்விளக்கு மாடத்துல வச்சிட்டு எனக்கு ஜாடை காட்டினா.

புறப்படும் போது நைசா அந்த காகித மடிப்பை கவர்ந்ததை பாத்து பர்வதம் பூத்த புன்னகைஇன்னும் கண்ணுலயே நிக்கறது.

சமையல் உள்ளை பாத்து, “ரசம் வாசனை தூக்கறதுடி பரிமளா.”

“என்ன ஏதாவது திரிசமம் பண்றேளா, முருங்கைக்கா சாம்பார்னா வைக்கறேன்”

“ தெரியாதா என்ன உன் சாம்பார் எட்டூருக்கு மணக்குமே, நீ எவ்வளவு உஷாரா இருக்கேனு செக்பண்ணினேன்”

“ இருங்கோ வந்து படிக்கறேன்”

நான் அவளை விட உஷார் ஆச்சே, பர்வதம் போர்ஷனை தனியான்னா எழுதறேன். கடைசிலசேத்தா போச்சு.”

எங்கே விட்டேன், விளக்கு மாடத்துல இருந்து எட்டா மடிச்ச காகிதத்தை எடுத்துண்டு நேரா எங்கவீட்டு மொட்டை மாடிதான்.ஒரே பரபரப்பு படபடனு அடிச்சிக்கறது, ஆர்வமா பிரிச்சேன்.”நாளைக்கு 11 மணிக்கு ஹெட் போஸ்ட் ஆபீஸ் போறேன்” அவ்வளவுதான்.இது என்ன லவ்லெட்டரா,சப்னு போயிட்டது, ஏமாத்திட்டாளே.

கீழே முகத்தை தொங்கப் போட்டுண்டு வந்தேன், அம்மா , “ ஏண்டா வீட்டுக் காரியம் ஒண்ணுபண்றயா, எப்ப பாரு சங்கரன் வீட்டு திண்ணையை கட்டிண்டு அழறே”

“நீ என்ன வேலை சொன்னே, எதை பண்ணலை ஏன் கத்திண்டே இருக்கே”

“உனக்கு வயசென்ன, எல்லாம் வாயைத் திறந்து சொல்லணுமா”

டக்னு புரிஞ்சது, “ ஓ மை ஸ்வீட் மம்மி தேங்க் யூ வெரி மச், அம்மாவை தோளோடுகட்டிண்டேன்.மிளகாப்பொடி, அரைச்சிண்டு வரணும், காஞ்ச விறகா பாத்து ரெண்டு தூக்குவாங்கிண்டு வரணும் அவ்வளவுதானே”

அம்மாக்கு ஆச்சரியம் என்னாச்சு, திடீர்னு தேன் குடிச்ச நரியாட்டம் துள்ளறான்

பர்வதம் உஷார்தான் தனியா என்னை கூப்பிட்டிருக்கா நான்தான் மடையன்.

மறு நாள் தலைமை தபால் நிலையத்துக்கு அவளை பாக்க போனேன். அவ வேலை முடிஞ்சு, பெஞ்ச்ல உக்காந்திருந்தா, நான் பக்கத்துல உக்காந்தேன்.

புன்முறுவல் பூத்த பாரு, “ பரவாயில்லையே உஷார்தான் நீ”

”சொல்லு இப்ப என்ன விஷயம்”

” ஒண்ணுமில்லை, எப்படி படிக்கறே, வருஷம் மும்மாரி பொழியறதா உங்க ஊர்ல, இன்னிக்குஉங்க வீட்ல என்ன சமையல்”

“ ஏய் கிண்டல்தானே, ஓ பாய்ஸ்தான் முதல்ல சொல்லணும் இல்லை?”

“என்ன,என்ன சொல்லணும் போ போய் செஸ் விளையாடு”

சட்னு அவ கையை கைல எடுத்துண்டேன்“ஐ லவ் யூ பாரு உன்னை பாத்ததுல இருந்தேஎனக்குள்ளே என்னவோ பண்றது”

அவ நேரா என் கண்ணை பார்த்தாள்,” நிஜமாவா, சீக்கிரமா அதாவது படிச்சு முடிச்சவுடனேஎங்காத்துக்கு என்னை பொண்ணு கேட்டு வருவயா, நான் காத்திருப்பேன், ஐ லவ் யூ டூ”

எனக்கும் ஒரு லவர் கிடைச்சிட்டா, அடுத்த 30 நாள் அவ சங்கரன் வீட்ல இருந்த வரை பார்வைபரிமாற்றங்கள், ஜாடை பேச்சுகள், சில சமயம் கடித பரிவர்த்தனை ரெண்டு தடவை மூணு பேருமாசினிமா, சின்னத் தொடுதல்கள் அவ்வளவுதான். ஊருக்கு போறதுக்கு முன்னால சங்கரனோடபாருவும் எங்க வீட்டுக்கு வந்தா, அம்மா கால்ல விழுந்து நமஸ்காரம் பண்ணினா. அம்மா அவளைஅணைச்சிண்டு, “சமத்து குழந்தை நன்னா படின்னா”

அவங்க போனவுடனே அம்மா என்னைப்பாத்து, “ ஓ இதுதானா விஷயம் கொஞ்ச நாளா மந்திரிச்சுவிட்ட கோழியாட்டாம் திரியறயேனு பாத்தேன். அதுக்கெல்லாம் காலம் இருக்கு முதல் படிச்சு ஒருஉத்யோகத்தை தேடிக்கோ”

“போம்மா ஏதாவது சொல்லிண்டு”

அன்னிக்கு சாயந்தரம் பெங்களூர் எக்ஸ்பிரெஸ்ல அவளை டிரெயின் ஏத்த சங்கரன், அவனோடஅப்பா கூட நானும் போனேன். ஜன்னலோரம் உக்காந்த பாரு டிரெயின் புறப்படறதுக்கு முன்னாலயாரும் பாக்காதப்ப என் கைகளை அழுத்திப் பிடிச்சா, கண் கலங்கியிருந்தது, எனக்கு துக்கம்தொண்டையை அடைத்தது. அவ்வளவுதான் வருஷங்கள் ஓடினது, இப்ப சங்கரனோட அப்பாக்குடில்லி பக்கம் எங்கயோ டிரான்ஸ்பர் அவனும் போயிட்டான். பர்வதம் பத்தி ஒரு தகவலும் இல்லை.

பர்வதம்தான் கிடைக்கலை மாமா பொண்ணு பரிமளாவை கல்யாணம் பண்ணிண்டாச்சு. அப்பப்பஅந்த பாரு ஞாபகம் வரும், நீங்களே சொல்லுங்க மறக்க முடியுமா முதல் காதல் ஆச்சே.