தொடர்கள்
தொடர்கள்
கண்ணதாசன் பாடல்களில் வாழ்வியல் கூறுகள் - 20 - காவிரி மைந்தன்

2022906211040755.jpg

2022906211111256.jpg

உலகத்தில்சிறந்ததுதாய்மை …

எத்தனையோ பாடல்கள் எழுதப்படுகின்றன… எல்லாப் பாடல்களும் நம் நெஞ்சைத் தொடுவதில்லை… இதோ இந்தப்பாடல் நெஞ்சைத் தொடுவது மட்டுமல்ல… நெஞ்சில் நிறைகிற வகையைச் சார்ந்தது! அன்பின் தொடக்கம் அன்னையிடமே… இதை எந்தப் பிள்ளையும் மறப்பதில்லையே!

பட்டிணத்தில் பூதம் திரைப்படத்தில் நடைபெறும் போட்டிப்பாடல் ஒன்று தருகின்ற விளக்கங்கள் கேட்டுப் பாருங்கள்… முதலில் நாகேஷ் அவர்கள் வட்டிக்காக வாங்குகிற வக்காலத்து.. அட.. இதுசரிதானே என்று சொல்லவைக்கும்! அடுத்து வருகிற கே.ஆர்.விஜயா … காதலை முன்மொழிந்து சபையில் கரவொலி வாங்கும்போது… அட… ஆமாம் என்றே நமக்குப்படும்! முத்தாய்ப்பாக ஜெய்சங்கர் மேடையேறி… தாய்மைக்காக வாதிடுகிற ஒவ்வொரு வரியும் கோபுரவாசல்போல உயர்ந்து நிற்கும்! இத்தகு எளிமையான வரிகளிட்டு தாய்மைக்கு ராஜகோபுரம் கட்டிவைத்திருப்பவர் கவியரசு கண்ணதாசன்! ஆர். கோவர்த்தனன்இசையில்…. டிஎம்.சௌந்தரராஜன் பி.சுசீலா மற்றும் ஏ.எல்.ராகவன் குரல்களில்…


வட்டிகொடுப்போரும்வாங்கிமுடிப்போரும்
காணத்துடிப்பதுஅது…
சிலர்எட்டிஉதைத்தாலும்கட்டிஅணைத்தாலும்
இதயத்தில்இருப்பதுஅது…

அறிவையும்கெடுப்பதுஅழகினில்பிறப்பது
அகிலத்தின்பெருங்கதைஅது
அன்றுஆதாம்ஏவாள்அடிக்கல்நாட்டிய
ஆனந்தமாளிகைஅது
உலகத்தில்சிறந்ததுகாதல்…
அந்தக்காதல்இல்லையேசாதல்…
உலகத்தில்சிறந்ததுகாதல்…
அன்பின் உன்னதம் எங்கு அதிகமாக மிளிர்கிறது என்று பார்க்கும்போது வாழ்க்கையின் எல்லாப் பக்கங்களிலும்தான்… ஆனால் அது தாய்மையிலன்றோ கோவில் கொண்டிருக்கிறது!
உலகப்பொருளாதாரத்தின் மூலகாரணியாய் விளங்கும் பணம்…
ஆதாம் ஏவாளில் தொடங்கி இன்றும் தொடரும் அற்புத உணர்வு காதல்…
இவையிரண்டையும் மிஞ்சி நிற்கும் தாய்மை! பாட்டு மன்றத்தில்கூட ஒரு பட்டிமன்றம் நடத்தித் தீர்ப்பையும் இனிதே வழங்கியிருக்கும் பெருமை எல்லாம் கவியரசே உனக்கே கை வந்தகலை! உன் கவிதைகள்… பாடல்கள் ஒவ்வொன்றும் தமிழர்களுக்காக நீ வடித்த அர்த்தமுள்ள சொல்லோவியங்கள்!!
இப்பாடலைக் கேட்கும்போதெல்லாம் …
தன் தாய் தனக்காக பட்ட பாடுகள் நெஞ்சில் எழாதவர் எவரிங்கே?
கண்ணில் நீர்சொரியும் கருணைமேகம் அவள்தானே..
கவியரசின் வரிகளில் உள்ள அர்த்தபுஷ்பங்களை ஆராதிக்காமல் இருக்க முடியுமா? கவிதா தேவியின் தலைமகனே உன்னிடத்தில் பூத்த உணர்வுப்பூக்கள் இன்றும்கூட உதிராமலிருக்கின்றன! இந்தபூமியில்இன்னும்கலப்படமாகாதது… அப்பழுக்கற்றது தாய்ப்பால் என்பார்கள்… அந்தத் தாய்ப்பாலுக்கு இணையான வரிகளாகவே இவற்றை நான் காண்கிறேன்… கேட்கும்போதெல்லாம் ஜீவன்வரை நனைகிறேன்!!


உள்ளே உயிர் வளர்த்து…உதிரத்தால் பால்கொடுத்து
அள்ளிஇடும்போதெல்லாம்… அன்பையேசேர்த்தெடுத்து
தொல்லைதனக்கென்றும்சுகமெல்லாம்உனக்கென்றும்
சொல்லாமல்சொல்லிடும்தேவதையின்கோவிலது
பண்புதெரியாதமிருகம்பிறந்தாலும்
பால்தரும்கருணைஅது – சிலர்
பசித்தமுகம்பார்த்துபதறும்நிலைபார்த்து
பழம்தரும்சோலைஅது
இருக்கும்பிடிசோறுதனக்கெனஎண்ணாமல்
கொடுக்கின்றகோவில்அது – தினம்
துடிக்கும்உயிர்கண்டுதோளில்இடம்தந்து
அணைக்கின்றதெய்வம்அது

அண்மையில் ஓரிடத்தில் படித்தேன்… ஒரு தாய்க்கு இரண்டு பிள்ளைகள் பிறந்தன. ஒரு ஆண்… ஒருபெண் … என்றே வைத்துக் கொள்ளுங்கள். ஆண் குழந்தை உயிருடனும் பெண்குழந்தை இறந்தும் என்று மருத்துவர்கள் சொல்ல… அந்தத்தாய் இறந்த பெண் குழந்தையை எடுத்து தன் மார்போடு அணைத்து இரண்டுமணி நேரத்திற்கும் மேலாக அழுகிறாள்… ஆற்றாமையை வெளிப்படுத்துகிறாள்… இறைவனின் காதில் அந்தத் தாயின் குரல் கேட்டதுவோ என்னவோ… அந்தப் பெண் குழந்தை சிணுங்கத் தொடங்குகிறது… மருத்துவர்களே அதிசயித்த இந்த நிகழ்வில் நாம் அறிந்துகொள்வது… அந்தச் சிசுவுக்கு மீண்டும் உயிரூட்டியது தாயின் அரவணைப்புதானே… தாய்மையைின் மேன்மைக்கு நிகராக இத்தரணியில் ஏதுமில்லை… ஏதுமில்லை… ஏதுமில்லை…

பயணம் தொடரும்...