தொடர்கள்
பேரிடர்
" ஊட்டியை சூறையாடிய சூறை காற்று " - ஸ்வேதா அப்புதாஸ் .

கடந்த இரண்டு வாரமாக தென் மேற்கு பருவமழை கொட்டி கொண்டிருக்க இயல்பு வாழ்க்கை அனைவரையும் மிகவும் பாதித்தது .

20240626114858384.jpg

புதிய நீலகிரி காலெக்டராக பொறுப்பேற்றார் லட்சுமி பாவே தன்னெரு .

அதிகமான மழை விஸ்வரூபம் எடுக்க நிலைமையை புரிந்து கொண்டு பள்ளிகளுக்கு விடுமுறை அளித்தார் .

மழை நான் ஸ்டாப்பாக பெய்து கொண்டே இருந்தது .

கடந்த ஞாயிற்று கிழமை சற்று எத்தனித்தது மழை .

மாலை திடீர் என்று காற்று வீச ஆரம்பித்தது .

20240626114941837.jpg

இரவு விடிய விடிய காற்று வீச ஊட்டி சுற்று வட்டாரம் , மஞ்சூர் , குந்தா பகுதி முழுவதும் சூறாவளி காற்று வீசி அடித்தது .

பேய் காற்று என்பது இதுவா என்பது போல அனைவரும் ஷாக்கில் மூழ்கினார்கள் .மழை சுத்தமாக நிற்க சூறாவளி காற்று வெளுத்து வாங்கியது .

இரவு முழுவதும் வீசிய காற்றால் ராசட்சச மரங்கள் வேரோடு சாய்ந்து ஏகப்பட்ட சேதத்தை ஏற்படுத்தியது .

நிறைய கார்கள் மரத்தில் சிக்கி நொறுங்கின .

2024062611542701.jpg

கூடலூரில் இருந்து சென்னைக்கு பயணித்த எஸ் இ டி சி விரைவு பேருந்து அனுமாபுரம் என்ற இடத்திற்கு வரும் பொழுது ஒரு ராட்சச மரம் பேருந்தின் மேல் விழ முன் பக்கம் மரத்தில் சிக்கி நொறுங்கியது நல்ல வேளை யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை .

லாரிகள் , மினி பஸ்கள் என்று சூறாவளி காற்றால் மரங்கள் விழுந்து நொறுங்கின .

ஊட்டி , குந்தா, கோத்தகிரி தாலுக்கா பகுதி முழுவதும் மின்கம்பங்கள் விழுந்தன .

ஐம்பதுக்கும் மேற்பட்ட ட்ரான்ஸ் பார்மர்கள் வளைந்து நொறுங்கின .

நூறுக்கும் மேற்பட்ட மின் கம்பங்கள் சாய்ந்தால் மின்சாரம் துண்டிக்க பட்டது .

இருநூறுக்கும் மேற்பட்ட மரங்கள் வேரோடு சாய்ந்தன பல சாலைகள் துண்டிக்க பட்டன .

20240626115406638.jpg

பயங்கர சூறாவளி காற்றால் பாதுகாப்பு கருதி பள்ளிகளுக்கு விடுமுறை அளித்தார் கலெக்டர் .

வனத்துறையினர் ,தீயணைப்பு துறையினர் மாற்றும் மின்சார ஊழியர்கள் கொடிய காற்று மற்றும் மழையில் இரவு பகலாக மரங்கள் வெட்டப்பட்டு ,மின்சார இணைப்பை சரிசெய்தது கொடூர இயற்கை பேரிடர் முன் ஒரு சவாலாகவே செய்து கொண்டிருக்கின்றனர் .

இந்த சவாலான பணியை செய்து முடித்து கொண்டிருக்கும் பணியாளர்களை காட்டாயமாக பாராட்டி கௌரவ படுத்தவேண்டும் என்பது நீலகிரி வாசிகளின் வேண்டுகோள் .

37 வருடத்திற்கு பின் இப்படி பட்ட சூறாவளி காற்று ஊட்டியை சூறையாடியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது .

தற்போது பழைய காலத்து தென் மேற்கு பருவ மழை பெய்து கொண்டிருக்க ..

20240626120158211.jpg

மாவட்ட ஆட்சியர் லட்சுமி பாவே தன்னெரு மற்றும் அதிகாரிகள் துரிதமாக செயல் பட்டுக்கொண்டிருப்பதால் எந்த உயிர் சேதமும் இல்லை என்பது ஆறுதலான விஷயம் .

அதே சமயம் பயங்கர காற்றால் உள்ளுர் வாசிகள் நடுக்கத்தில் நடுங்கி கொண்டிருக்கிறார்கள் .