தொடர்கள்
தொடர்கள்
மக்கள் பார்வையில் கம்பர் - 17 -ரமேஷ்எத்திராஜன்

20221109175248289.jpg

தான் சொல்ல வந்த கருத்தை
எளிய உவமை நயத்தோடு
எளிதில் புரியும் படியான
தாடகை வதைப்படலத்தின் பாடல்


சொல் ஒக்கும் கடிய வேகச்
சுடு சரம் கரிய செம்மல்
அல் ஒக்கும் நிறத்தினாள் மேல்
விடுதலும் வயிரக் குன்றக்
கல் ஒக்கும் நெஞ்சில் தங்காது
அப்புறம் கழன்று கல்லாப்
புல்லார்க்கு நல்லோர் சொன்ன
பொருள் என போயிற்று அன்றே


நிறை மொழி மனிதரின் சொற்களை
ஒத்த வேகத்தை உடைய அம்பை
கரிய நிற அழகுடைய இராமன்

இருள் போன்ற நிறமுடைய தாடகை
மீது செலுத்த அது கல்வி அறிவில்லாதவர்க்கு
நல்லோர் சொன்ன சொல் போல்
நெஞ்சில் தங்காமல் முதுகு வழியாக
சென்றது என்பதே பாடலின் பொருள்

எளிய உவமை நயத்தோடு
நயமாக கவி பாடிய கம்பரை
போற்றுவோம் பாராட்டுவோம்

மீண்டும் சந்திப்போம்...